மோசடிக்காரர்களுக்கு உதவிய சகோதரிகள் இருவருக்கு ஓராண்டு சீர்திருத்தப் பயிற்சி

மோசடிக்காரர்களுக்கு உதவிய சகோதரிகள் இருவருக்கு ஓராண்டு சீர்திருத்தப் பயிற்சி

1 mins read
f9913eb6-f128-4f65-98c6-18cfd5469a4a
-

வேலை, காதல் மோச­டி­களில் ஏமாந்­த­வர்­க­ளி­டம் இருந்து பெறப்­பட்ட கிட்­டத்­தட்ட $1 மில்­லி­யனை வங்­கிக் கணக்­கு­க­ளுக்கு மோச­டிக்­கா­ரர்­கள் மாற்­றி­விட உதவிய சகோ­த­ரி­கள் இரு­வர், தலா ஓராண்டு சீர்­தி­ருத்­தப் பயிற்­சிக்­குச் செல்­ல­வேண்­டும்.

நன்­ன­டத்­தைக் கண்­கா­ணிப்பு அதி­காரி ஒரு­வ­ருக்கு ஒத்­து­ழைப்பு தர அவர்­கள் மறுத்­த­தைத் தொடர்ந்து இந்த சீர்­தி­ருத்­தப் பயிற்சி உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டு உள்­ளது.

மோச­டி­களில் தங்­க­ளுக்­குப் பங்கு இருப்­ப­தாக கடந்த மார்ச் 8ஆம் தேதி குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து, நூர் ஷஃபிகா முகம்­மது அவ்­வால், 20, நூர் அதிகா முகம்­மது அவ்­வால், 19, எனும் அந்­தச் சகோ­த­ரி­க­ளுக்கு நன்­ன­டத்­தைக் கண்­கா­ணிப்பு உத்­த­ரவு பிறப்­பிக்க ஆலோ­சனை வழங்­கப்­பட்­டது.

எனி­னும், நன்­ன­டத்­தைக் கண்­கா­ணிப்பு அதி­கா­ரி­யின் அறி­வுறுத்­த­லைப் பின்­பற்­ற­வும் அது தொடர்­பி­லான அமர்­வு­களில் பங்­கேற்­க­வும் அந்­தச் சகோ­த­ரி­கள் தவ­றி­னர்.