நிலப் போக்குவரத்து ஆணைய அதிகாரி ஒருவர், தமது வேலை மடிக்கணினியில் இருந்து சொந்த மடிக்கணினிக்கு கோப்புகளை நகல் எடுத்தார். பணியிலிருந்து விலகிய பின்னரும் தாம் நகல் செய்த அந்தக் கோப்புகளை அவர் தக்கவைத்துக்கொண்டார்.
அதிகாரத்துவ ரகசிய சட்டத்தின்கீழ் இது குற்றமாகும்.
நிலப் போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் உதவிச் சுற்றுப்புற மேலாளரான பெனி டான் யோங் லியாங், 34 (படம்), அதிகாரத்துவ ரகசிய சட்டத்தின்கீழ் குற்றம் புரிந்தது நிரூபணமானது. அவருக்கு நேற்று $2,000 அபராதம் விதிக்கப்பட்டது.
2020 அக்டோபர் 19ஆம் தேதி, தமது பதவி விலகல் கடிதத்தை டான் சமர்ப்பித்தார். ஆணையத்தில் தமது கடைசி வேலை நாள் நவம்பர் 19ஆம் தேதி என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.
அக்டோபர் 22ஆம் தேதி, ஆணையத்தின் மனிதவளப் பிரிவு டானுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியது. பணியிலிருந்து விலகிய பின்னரும் அதிகாரத்துவத் தகவலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் அதில் வலியுறுத்தப்பட்டது. அதை அத்துமீறினால் அதிகாரத்துவ ரகசிய சட்டத்தின்கீழ் அவர் மீது குற்றம் சுமத்தப்படும் என்றும் அவரிடம் எச்சரிக்கப்பட்டிருந்தது.
ஆணையத்தில் அவர் பணிபுரிந்த கடைசி வாரத்தில், வேலை மடிக்கணினியில் இருந்து சொந்த மடிக்கணினிக்கு 4,310 கோப்புகளை டான் நகல் எடுத்தார். அவற்றின் மொத்த அளவு 32.05ஜிபி.

