புதிய தனியார் வீடுகளின் விலை உயரும்; 71% விற்பனை நிறுவனங்கள் எதிர்பார்ப்பு

புதிய தனியார் வீடுகளின் விலை உயரும்; 71% விற்பனை நிறுவனங்கள் எதிர்பார்ப்பு

2 mins read
2023c63a-4f4a-43be-85c8-6d41235b91af
சிங்கப்பூரில் அடுத்த ஆறு மாதத்தில் விற்பனைக்கு விடப்படும் வீடுகளின் எண்ணிக்கை யில் மிதமான அதிகரிப்பு இருக்கும் என்று வீடுகளை கட்டி விற்கும் நிறுவனங்களில் சுமார் 65% நிறுவனங்கள் எதிர்பார்க் கின்றன. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம் -

சிங்­கப்­பூ­ரில் புதி­தாக விற்­ப­னைக்கு வரும் தனி­யார் வீடு­க­ளின் விலை அதி­க­மாக இருக்­கும். அந்த வீடு­களை வாங்க விரும்­பு­வோர் இதற்கு தயா­ராக வேண்­டிய சூழல் வர­லாம்.

தனி­யார் வீடு­களைக் கட்டி விற்­கும் நிறு­வ­னங்­களில் ஏறத்­தாழ 71% நிறு­வ­னங்­கள் அடுத்த ஆறு மாத காலத்­தில் தங்­கள் விற்­ப­னைக்கு கொடுக்­கும் வீடு­க­ளின் விலை மித­மா­னது முதல் கணி­ச­மான அளவு வரை அதி­க­மாக இருக்­கும் என்று எதிர்­பார்க்­கின்­றன.

ஆய்வு ஒன்­றின் மூலம் இந்த நில­வ­ரம் தெரி­ய­வந்­துள்­ளது.

மூன்று மாதத்­திற்கு முன் இப்படி எதிர்­பார்த்த நிறு­வ­னங்­க­ளின் எண்­ணிக்கை ஏறத்­தாழ 60 விழுக்­காடாக இருந்­தது.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக் கழகத்­தின் நிலச் சொத்து அமைப்பு, 'நிலச்சொத்து கண்­ணோட்ட அறிக்கை' என்ற ஓர் அறிக்­கையை நேற்று வெளி­யிட்­டது.

இந்த ஆண்­டின் முதல் காலாண்­டின்­போது இத்­த­கைய 24 விழுக்­காட்டு நிறு­வ­னங்­கள் புதிய வீடு­களின் விலை மாற்­ற­மின்றி அதே அள­வில் இருக்­கும் என்றும் 5% நிறு­வ­னங்­கள் மட்­டுமே விலை கணி­ச­மான அள­வுக்குக் குறை­யும் என்றும் எதிர்­பார்க்­கின்­றன.

இதற்கு முன் 2021 கடைசிக் காலாண்­டில் நடத்­தப்­பட்ட ஆய்­வைப் பார்க்­கை­யில், விலை மாற்­ற­மின்றி இருக்­கும் என்று கூறிய நிறு­வனங்­களின் அளவு 35% ஆக இருந்­தது.

இவ்­வே­ளை­யில், அடுத்த ஆறு மாதத்­தில் விற்­ப­னைக்கு வரும் வீடு­க­ளின் எண்­ணிக்கை மித­மான அள­வுக்கு அதி­க­மாக இருக்­கும் என்று இந்த ஆண்­டின் முதல் காலாண்­டில் நடத்­தப்­பட்ட ஆய்­வில் கலந்­து­கொண்ட நிறு­வ­னங்­களில் சுமார் 65 விழுக்­காட்டு நிறு­வ­னங்­கள் தெரி­விக்­கின்­றன.

புதி­தாக விற்­ப­னைக்கு வரும் வீடு­க­ளின் எண்­ணிக்கை மித­மான அள­வுக்குக் குறை­வாக இருக்­கும் என்று ஏறக்­கு­றைய 15 விழுக்­காட்டு நிறு­வ­னங்­கள் கணிக்­கின்­றன.

அதே­வே­ளை­யில், நிலச் சொத்து நிறு­வ­னங்­க­ளைச் சேர்ந்த மூத்த நிர்­வா­கி­களில் கிட்­டத்­தட்ட 95 விழுக்­காட்­டி­னர், அடுத்த ஆறு மாத காலத்­தில் கட்­டு­மானச் செலவு அதி­க­ரிப்­பும் பண­வீக்­க உயர்­வும் வட்­டி­வி­கித உயர்­வும் ஆபத்­தான அம்­சங்­க­ளாக இருக்­கக்­கூ­டிய வாய்ப்புள்ளதாக கரு­து­கி­றார்­கள்.

உல­கப் பொரு­ளி­ய­லில் மெது­வான போக்கு இருக்­கிறது என்­றும் இது­வும் பாதிக்­கக்­கூ­டிய அம்­ச­மாக இருக்­க­லாம் என்­றும் தெரி­வித்தோர், முந்­திய ஆய்­வை­விட இந்த ஆண்டில் அதி­கம்.