ஆள்மாறாட்ட மோசடியில் $3 மில்லியன் இழப்பு

ஆள்மாறாட்ட மோசடியில் $3 மில்லியன் இழப்பு

1 mins read
17ee0017-5e5f-4dbd-883b-6b838c0d1cb4
-

கடந்த இரண்டு வாரங்­களில் நண்­பர்­க­ளைப்­போல் ஆள்­மா­றாட்­டம் செய்து தொலை­பே­சி­யில் அழைத்து நிதி­யு­தவி கேட்ட மோச­டிக்­கா­ரர்­க­ளி­டம் கிட்­டத்­தட்ட 80 பேர் ஏமாந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த ஆண்டு தொடக்­கத்­தில் இருந்து இது­வரை ஏறத்­தாழ 667 பேர் இத்­த­கைய மோச­டி­களில் மூன்று மில்­லி­யன் வெள்ளிக்கும் மேல் இழந்­த­தா­கக் காவல்­துறை தெரி­வித்­தது.

'+' குறி­யு­டன் வரும் தொலை­பேசி அழைப்­பில் மோச­டிக்­கா­ரர் தான் யாரென்று குரலை வைத்­துக் கண்­டு­பி­டிக்­கும்­படி கூறு­வார்.

அழைக்­கப்­பட்­ட­வர் ஏதா­வது ஒரு நண்­பர் பெய­ரைச் சொன்­ன­வு­டன் தனது புதிய தொலை­பேசி எண்­ணைக் குறித்­துக்­கொள்­ளச் சொல்­வார். பின்­னர் கடன் கேட்டு வங்­கிக் கணக்கு விவ­ரங்­க­ளை­யும் தரு­வார். பாதிக்­கப்­பட்­ட­வர் உண்­மை­யான நண்­ப­ரைத் தொடர்­பு­கொண்ட பிறகே ஏமாற்­றப்­பட்­டது தெரி­ய­வ­ரும்.