கடந்த இரண்டு வாரங்களில் நண்பர்களைப்போல் ஆள்மாறாட்டம் செய்து தொலைபேசியில் அழைத்து நிதியுதவி கேட்ட மோசடிக்காரர்களிடம் கிட்டத்தட்ட 80 பேர் ஏமாந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை ஏறத்தாழ 667 பேர் இத்தகைய மோசடிகளில் மூன்று மில்லியன் வெள்ளிக்கும் மேல் இழந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
'+' குறியுடன் வரும் தொலைபேசி அழைப்பில் மோசடிக்காரர் தான் யாரென்று குரலை வைத்துக் கண்டுபிடிக்கும்படி கூறுவார்.
அழைக்கப்பட்டவர் ஏதாவது ஒரு நண்பர் பெயரைச் சொன்னவுடன் தனது புதிய தொலைபேசி எண்ணைக் குறித்துக்கொள்ளச் சொல்வார். பின்னர் கடன் கேட்டு வங்கிக் கணக்கு விவரங்களையும் தருவார். பாதிக்கப்பட்டவர் உண்மையான நண்பரைத் தொடர்புகொண்ட பிறகே ஏமாற்றப்பட்டது தெரியவரும்.