கப்பல்களுக்கு சட்டவிரோதமாக எரிபொருளை நிரப்புவதற்காக லஞ்சம் பெற்றுக்கொண்ட ஆய்வாளர்கள் மூவருக்கு நேற்று நான்கு முதல் எட்டு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனந்த் ஓம்பிரகாஷ், நூருலிமான் பக்டி, முகமது கைருல் அஸ்ரி முகமது ஹனாஃபியா மூவரும் கையூட்டு பெற்றுக்கொண்டதை ஒப்புக்கொண்டர். அவர்கள் 6,000 முதல் 25,000 டாலர் வரை லஞ்சம் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
2007ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 200,000 டன் எரிபொருள் சட்டவிரோதமாக மாற்றப்பட்டது கண்டறியப்பட்டது.
அதன் மொத்த விலை 128 மில்லியன் வெள்ளி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

