கலை அலங்கார கட்டடங்களை சித்திரிக்கும் அஞ்சல்தலைகள்

கலை அலங்கார கட்டடங்களை சித்திரிக்கும் அஞ்சல்தலைகள்

2 mins read
c878e764-b548-40c6-957e-c8a7e362dee3
இந்த பாணியில் ஆனபல கட்ட டங்கள் 1930க்கும் 1950க்கும் இடையில் சிங்கப் பூரில்கட்டப் பட்டவை.படங்கள்: சிங் போஸ்ட் -

சிங்­கப்­பூ­ரின் ஆறு பழ­மைப் பாது­காப்­புக் கட்­ட­டங்­களை நினை­வு­படுத்­தும் வகை­யில் சிங்­கப்­பூர் அஞ்­சல் நிறு­வ­னம் ஆறு அஞ்­சல்­த­லை­களை வெளி­யிட்­டு­ உள்­ளது.

மெர்­ல­யன் பூங்­கா­வுக்கு அரு­கில் உள்ள ஃபுல்லர்­டன் வாட்­டர்­போட் ஹவுஸ், தஞ்­சோங் பகா­ரில் உள்ள மேக்ஸ்­வெல் சேம்­பர்ஸ், விட்­டில் இந்­தி­யா­வின் எண் 9, நோரிஸ் ரோடு கட்­ட­டம், நகர மண்­ட­பத்­துக்கு அரு­கில் உள்ள 36, 38 ஆர்­மீ­னி­யன் ஸ்தி­ரீட், கம்­போங் கிளா­முக்கு அரு­கில் உள்ள 13 பாகாங் ஸ்தி­ரீட், போட் கீக்கு அரு­கில் உள்ள 79 சர்க்­கு­லர் ரோடு ஆகி­ய­வையே அந்த ஆறு பழ­மைப் பாது­காப்­புக் கட்­ட­டங்­கள்.

இப்­போது அந்­தக் கட்­ட­டங்­கள் வர்த்­த­கம், அலு­வ­ல­கம், குடி­யிருப்பு ஆகி­ய­வற்­றுக்­கா­கப் பயன் படுத்­தப்­பட்டு வரு­கின்­றன.

கலை அலங்­கார பாணியை உள்­ள­டக்­கிய பல கட்­ட­டங்­கள் 1930களுக்­கும் 1950களுக்­கும் இடை­யில் சிங்­கப்­பூ­ரில் கட்­டப்­பட்­டன. அவற்­றில் பல­வற்­றுக்கு, அஞ்­சல்­த­லை­களில் இடம்­பெற்­றுள்ள ஆறு கட்டடங்கள் உட்பட, நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யத்­தால் பின்­னர் பழ­மைப் பாது­காப்பு அங்­கீ­கா­ரம் வழங்­கப்­பட்­டது.

இந்த கட்­ட­டக்­கலை பாணி 1900களின் முற்­ப­கு­தி­யில் பாரி­ஸில் இருந்த கட்­ட­டங்­க­ளைப் பிர­தி­ப­லிக்­கின்­றன. இது இடை யறாக் கோடு­கள், நீள்­ச­துர வடி­வங்­கள், முகப்­பில் எந்த அலங்­கா­ர­மும் இல்­லா­தது என அந்தக் காலத்­தில் நடை­மு­றை­யில் இருந்த கட்­ட­டக்­கலை வடி­வத்­தி­லி­ருந்து மாறி­யி­ருப்­ப­தைக் குறிக்­கிறது.

இந்த பாணி பின்­னர் 1930களுக்­கும் 1960களுக்­கும் இடை­யில் உல­கின் பல பகு­தி­களில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது.

அஞ்­சல்­த­லை­கள் 30 காசுக்­கும் $1.50க்கும் இடைப்­பட்ட விலை­யில் நேற்று முதல் விற்­கப்­பட்­டன. வாடிக்­கை­யா­ளர்­கள் முழுத் தொகுப்பை $5.15க்கு வாங்­கிக்­கொள்­ள­லாம்.