முதியவர் ஒருவர் சாலையைக் கடப்பதைக் கவனிக்காத பகுதிநேர 'கிராப்' ஓட்டுநர் குவா சொன் இங், 67, அவர் மீது மோதினார். 82 வயதுடைய அந்த முதியவர் பலத்த காயங்கள் ஏற்பட்டு பின்னர் உயிர் இழந்தார்.
குவாவுக்கு நேற்று ஒன்பது வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் அனைத்து வகை வாகனங்களையும் ஓட்டுவதற்கான உரிமத்தையும் அவர் வைத்திருக்கவோ பெறவோ எட்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.
வாகனங்கள் வருவதைக் கவனிக்கத் தவறிய திரு லீ ஹோய் போங், சாலையைக் கடந்ததாகவும் கவனக்குறைவுடன் வாகனத்தை ஓட்டிச் சென்ற குவா அவரைக் கவனிக்காமல் மோதியதாகவும் கூறப்பட்டது.
மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே முதியவர் மாரடைப்பால் மாண்டார்.

