மோசடிச் சம்பவங்களில் $5.5 மில்லியன் இழப்பு; 295 சந்தேக நபர்கள் மீது விசாரணை

மோசடிச் சம்பவங்களில் $5.5 மில்லியன் இழப்பு; 295 சந்தேக நபர்கள் மீது விசாரணை

1 mins read
9a433620-824b-4e58-b0eb-c2f25603bb96
-

வேலை, கடன், வாடகை, இணை­ய­வழி காதல் போன்­ற­வற்­றின் தொடர்­பில் நடந்­துள்ள 746க்கும் மேற்­பட்ட மோச­டிச் சம்­ப­வங்­கள் குறித்து காவல் துறை­யி­னர் சுமார் 300 பேரி­டம் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர். மோச­டிப் பேர்­வ­ழி­கள் என்று நம்­பப்­படும் அந்த 295 பேரும் 16 வய­துக்­கும் 80 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள் என்று காவல் துறை­யி­னர் தெரி­வித்­துள்­ள­னர்.

அவர்­களில் 199 ஆட­வர்­களும் 96 பெண்­களும் அடங்­கு­வர்.

மோச­டிக்கு ஆளா­ன­வர்­கள் $5.5 மில்­லி­ய­னுக்கு மேல் இழந்­துள்­ள­தா­க­வும் கூறப்­பட்­டது.

ஏமாற்­று­தல், பண மோசடி, உரி­மம் இன்றி கட்­ட­ணச் சேவை­கள் வழங்­கு­தல் போன்­ற­வற்­றின் தொடர்­பில் சந்­தேக நபர்­கள் மீது விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. வர்த்­தக மின்­னஞ்­சல், அர­சாங்க அதி­கா­ரி­யாக ஆள்­மா­றாட்­டம், இணைய வர்த்­த­கம், முத­லீடு மற்­றும் இதர மோச­டிச் சம்­ப­வங்­கள் தொடர்­பில் விசா­ரணை அமைந்­துள்­ளது.

வர்த்­த­கக் குற்ற விசா­ர­ணைப் பிரிவு அதி­கா­ரி­களும் ஏழு காவல்­துறை நிலப் பிரிவு அதி­கா­ரி­களும் இம்­மா­தம் 14ஆம் தேதிக்­கும் 26ஆம் தேதிக்­கும் இடையே மேற்­கொண்ட இரு வார அம­லாக்­கச் சோதனை நட­வ­டிக்­கை­யின்­போது சந்­தேக நபர்­கள் சிக்­கி­னர்.

"பொது­மக்­கள் தங்­க­ளின் வங்­கிக் கணக்­கையோ தொடர்பு எண்­ணையோ மற்­ற­வர்­கள் பயன்­ப­டுத்­தக் கேட்­கும்­போது மறுத்­து­விட வேண்­டும். குற்­றச்­செ­யல்­கள் தொடர்­பில் இவை கண்­ட­றி­யப்­பட்­டால் குற்­றத்­திற்கு உடந்­தை­யாக இருப்­ப­தா­கக் கூறப்­படும்," என்று காவல் துறை­யி­னர் எச்­ச­ரித்து உள்­ள­னர்.