ஜப்பானியர்கள் நவநாகரிக உடை உடுத்தும் பாணியை சிங்கப்பூரில் பின்பற்றி வந்த ஓர் ஆர்வலர் குழுவின் மூலம் ஆடவர் ஒருவருக்கு உயர்நிலை 3 மாணவி ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. ஆனால், அறிமுகத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் இருவரும் பலமுறை பாலியல் செயல்களில் ஈடுபட்டனர். பெயர் குறிப்பிடாத ஒருவர், சிறுமியின் குடும்பத்தாரிடம் இதைப் பற்றி கூறியதை அடுத்து காவலர்களுக்கு ஆடவரின் செயல் குறித்துத் தெரிவிக்கப்பட்டது. குறைந்த வயதுடையவருடன் உடலுறவு கொண்டதன் தொடர்பில் மூன்று குற்றச்சாட்டுகளை ஆடவர் ஒப்புக்கொண்டார். நேற்று 34 வயதுடைய அந்த ஆடவருக்கு 28 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆடவருக்கு மிதமான அறிவாற்றல் குறைபாடு இருந்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டபோதும் குற்றம் புரிந்த சமயத்தில் சரி எது, தவறு எது என்று பிரித்துப் பார்க்கும் ஆற்றல் ஆடவருக்கு இருந்ததாக பின்னர் கூறப்பட்டது.
14 வயது சிறுமியுடன் உடலுறவு: ஆடவருக்கு 28 மாதச் சிறை
1 mins read
-