கடல்துறையின் இளம் தூதர்களான 18 மாணவர்கள்

கடல்துறையின் இளம் தூதர்களான 18 மாணவர்கள்

2 mins read
a555c7b4-2878-4440-aa6b-1dd3ebf26de0
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சிங்கப்பூர் கடல்துறைத் தூதர்களிடம் போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் உரையாடுகிறார். வலமிருந்து இரண்டாவதாக இருப்பவர் கதிரவன் சுப்பிரமணியம். படம்: சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் -

மாதங்கி இளங்­கோ­வன்

இளை­யர்­க­ளைக் கடல்­து­றை­யில் ஈர்ப்­ப­தற்கு சிங்­கப்­பூர் கடல்­துறை, துறை­முக ஆணை­யம் நேற்று 18 உயர்­கல்வி நிலைய மாண­வர்­களை முதல் முறை­யாக சிங்­கப்­பூர் கடல்­துறை இளை­யர் தூதர்­க­ளாக நிய­மித்­தது.

இவ்விழா நேற்­று சிங்­கப்­பூர் கடல்­துறை, துறை­முக ஆணை­யப் பயிற்­சிக் கழ­கத்­தில் நடை­பெற்­றது.

போக்கு­வரத்து மூத்த துணை அமைச்­சர் சீ ஹொங் டாட் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­டார்.

"சிங்­கப்­பூர் கடல்­து­றைத் தூதர் திட்­டத்­தின் மூலம் கடல்­து­றை­யின் அடுத்த தலை­மு­றைத் திற­னா­ளர்­களை உரு­வாக்­கு­கி­றோம். அவர்­கள் மற்ற இளை­யர்­க­ளுக்கு இத்­து­றை­யின் சிறப்­பு­களை எடுத்­துக்­கூறி, பல்­வேறு நிகழ்ச்­சி­க­ளை­யும் நடத்­து­கின்­ற­னர். புத்­தாக்­க­மும் வெவ்­வேறு தொழில்­நுட்ப மாற்­றங்­களை­யும் காணும் கடல்­து­றை­யில் பல­த­ரப்­பட்ட பின்­ன­ணி­க­ளைக் கொண்­டுள்ள மாண­வர்­களை வர­வேற்­பதன் மூலம் இத்­து­றை­யி­லி­ருக்­கும் ஏரா­ள­மான வேலை வாய்ப்­பு­களை நாம் பறை­சாற்­று­கி­றோம்," என்று அவர் விவ­ரித்­தார்.

கடல்­து­றை­யில் தங்­க­ளது குடும்ப உறுப்­பி­னர்­க­ளின் அனு­பவம் கார­ண­மாக, கடல்­து­றை­யில் அதிக ஆர்­வம் காட்­டும் இரு இளை­யர்­களான கதி­ர­வன் சுப்­ப­ர­ம­ணி­யம், கேஷ­மர்த்­தினி யோக­சுந்­த­ரம், கடல்­து­றை­யில் வேலை செய்­யும் வேட்கை ­யோடு இருப்­ப­தால் சிங்­கப்­பூர் கடல்­து­றை­யின் இளம் தூதர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­ட­னர்.

தமது அண்­ணன் கடல்­து­றை­யில் பல ஆண்­டு­களாகப் பணி புரிந்து வருவதை பார்த்து வளர்ந்த 24 வயது கதி­ர­வ­னுக்கு சாதா­ரண அலு­வ­லக வேலை­யில் ஈடு­பட அவ்­வ­ளவு ஆர்­வ­மில்­லா­த கார­ணத்­தால் பர­பரப்­பான கப்­பல்­து­றை­யில் வேலை தேட ஆர்வம் ஏற்பட்டது.

இவ்­வாண்டு எஸ்ஜி ஆசியா ஹைட்­ரோ­லிக்ஸ் நிறு­வ­னத்­தில் செய்த வேலைப் பயிற்சி பெற்றதன் கடல்­து­றை­யின் வெவ்­வேறு அம்­சங்­க­ளைப் புரிந்­து­கொண்­ட­தோடு செய்­மு­றைப் பயிற்சி அனு­ப­வத்­தை­யும் பெற்­றார்.

கடல்­து­றை­யில் பணி­பு­ரி­ப­வர்­களோடு உரை­யா­டும்­போ­தும் இணைந்து வேலை செய்­யும்­போதும் தேசிய சேவை­யின்போது கிடைத்த சகோ­த­ரத்­து­வ உணர்வைப் பெற்ற தாக கதிரவன் கூறினார்.

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் இயந்­தி­ரப் பொறி­யி­யல் படிப்பை மேற்­கொள்­ளும் இவர், கடல்­து­றை­யில் பணி­பு­ரி­வ­தற்கு 22 மாத உரு­மாற்­றுப் பயிற்சியை மேற்கொண்ட பின்­னர் இத்­து­றை­யில் கால்­த­டம் பதிக்க விரும்­பு­கி­றார்.

அவ­ரைப்போல சிங்­கப்­பூர் தொழில்­நுட்­பப் கழ­கத்­தில் பயி­லும் 21 வயது கேஷ­மர்த்­தி­னியும், தந்தை யின் கடல்­சார் பொறி­யி­யல் அனு­பவங்­களைக் கேட்­டுத் தாமும் இத்­து­றை­யில் ஆராய்ச்சி மேம்­பாட்­டுத் துறை­யில் வேலை செய்­ய­ ஆர்வம் வந்தது என்றார்.

வெளி­நாடு­க­ளுக்­குச் சென்று பணி­பு­ரிய வேண்­டும் என்று ஆர்­வத்­தோடு இருக்­கும் கேஷ­மர்த்­தி­னிக்கு இத்­திட்­டத்­தின் வாயி­லாக முக்­கிய கடல்­துறை அதி­கா­ரி­களைச் சந்­தித்துப் பேசும் அரிய வாய்ப்­பும் அமை­ய­லாம் என நம்­பு­கி­றார்.