பயணிகளைப் புதுப்பொலிவுடன் வரவேற்ற சாங்கி விமான நிலையத்தின் முனையம் 2

புதுப்பிக்கப்பட்ட சாங்கி விமான நிலையத்தின் 2வது முனையம் இன்று பயணிகளை வரவேற்றது. ஜெர்மனியின் மியூனிக் நகரிலிந்து புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை 2வது முனையத்தில் தரையிறங்கியது.

எஸ்கியூ327 விமானத்தில் பயணம் செய்தவர்கள் புதுப்பிக்கப்பட்ட முனையத்தின் புதிய அம்சங்களையும் வசதிகளையும் வரவேற்றனர்.

முனையத்தின் வருகையாளர் கூடத்திலிருந்து முதல் ஆளாக வெளியே வந்தார் நிதித் துறையில் பணியாற்றும் கெள‌ஷிக் மோகன், 38. முனையத்தில் செயல்படும் புதிய தானியக்கக் குடிநுழைவுச் சோதனை முறையைப் பயன்படுத்துவது மிக எளிதாகவும், விரைவாகவும் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

முனையத்தில 34 தானியக்கக் குடிநுழைவுச் சோதனை வரிசைகள் உள்ளன. இவற்றில் 12 வரிசைகள் நடமாட சிரமம் உள்ளவர்களும் பெரிய குடும்பங்களும் பயன்படுத்த ஏதுவாக தாராளமாக அமைக்கப்பட்டுள்ளன.

முனையத்தின் புறப்படும் கூடம் உள்ளிட்ட சில பகுதிகளில் இன்னும் புதுப்பிப்புப் பணிகள் நடந்துவருகின்றன. அனைத்து பணிகளும் 2024ஆம் ஆண்டுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாவது முனையத்திலிருந்து செயல்படும் சில விமானச் சேவைகள் உச்ச நேரங்களின்போது இரண்டாவது முனையத்தில் இயங்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!