பள்ளி விடுமுறையில் இலவச பொழுதுபோக்கு நடவடிக்கைகள்

பள்ளி விடுமுறையில் இலவச பொழுதுபோக்கு நடவடிக்கைகள்

2 mins read
1f78e1c7-7999-49be-939f-40a470917791
-

பள்ளி விடு­மு­றை­யில் பிள்­ளை­களுக்­குப் பொழு­து­போக உத­வும் நட­வ­டிக்­கை­க­ளுக்­குப் பெற்­றோர் அதி­கம் செல­வு­செய்­யத் தேவை­யில்லை.

சிங்­கப்­பூ­ரில் இல­வ­ச­மா­கவே பார்த்து மகி­ழக்­கூ­டிய இடங்­க­ளுக்­கும் குடும்­பப் பிணைப்பை வலுப்­படுத்­தும் நட­வ­டிக்­கை­க­ளுக்­கும் பஞ்­ச­மில்லை என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் பேசிய சில பெற்­றோர் கூறி­னர்.

'சுங்­கை பூலோ வெட்­லேண்ட் ரிசர்வ்','லோவர் பியர்ஸ்' நீர்த்­தேக்­கப் பூங்கா, 'மெக்­ரிட்சி' இயற்கை நடை­பாதை, சிங்­கப்­பூர் பூமலை போன்ற பசு­மை­யான இடங்­களுக்கு அழைத்­துச் செல்­ல­லாம்.

கரை­யோ­ரப் பூந்­தோட்­டத்­தில் 'அரௌண்ட் த வேர்ல்ட் வித் கிஸ்­டோ­பியா' எனும் கருப்­பொ­ரு­ளில் உல­கின் புகழ்­பெற்ற இடங்­கள் பலூன் வடி­வில் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டுள்­ளன. ஜூன் 19ஆம் தேதி வரை இவற்றை இல­வ­ச­மா­கக் காண­லாம்.

சறுக்­குப் பலகை போன்ற புதிய விளை­யாட்­டுத் திற­னைக் கற்­றுக்­கொ­டுக்­க­லாம். சிறுவர்களின் மீள்திறனுக்கு இது கைகொடுக்கும். ஆறு முதல் 12 வயது வரை­யி­லான சிறு­வர்­க­ளுக்கு இல­வ­ச­மாக ஒரு மணி நேரப் பயிற்சி வகுப்­பு­க­ளுக்கு ஏற்­பாடு செய்­துள்ளது சிங்­கப்­பூர் விளை­யாட்டு நடு­வம்.

இல­வச நீர் விளை­யாட்டு நட­வடிக்­கை­க­ளுக்­கும் குழந்­தை­களை அழைத்­துச் செல்­ல­லாம்.

தீய­ணைப்பு நிலை­யங்­கள் வாரம் ஒரு முறை பொது­மக்­களுக்குத் திறந்­து­வி­டப்­ப­ட­வி­ருக்­கின்­றன. 18 தீய­ணைப்பு நிலை­யங்­களில் சனிக்­கி­ழ­மை­களில் காலை இரண்டு முறை இத்­த­கைய அனு­மதி உண்டு. மேல் விவ­ரங்­களுக்கு சிங்­கப்­பூர்க் குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் இணை­யப் பக்­கத்தை நாட­லாம்.

சிங்­கப்­பூ­ரர்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் நாட்­டில் உள்ள அரும்­பொ­ரு­ள­கங்­கள், மர­பு­டைமை நிலை­யங்­கள் ஆகி­ய­வற்­றுக்கு இல­வ­ச­மா­கச் சென்று காண­லாம்.

பிள்­ளை­க­ளின் வய­துக்கு ஏற்ப பெற்­றோர் திட்­ட­மிட்டு இத்­த­கைய இடங்­க­ளுக்கு அழைத்­துச் சென்று அதிக செல­வின்றி பொழு­து­போக்கு நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­ட­லாம் என்று பெற்றோர் சிலர் பகிர்ந்து­கொண்­ட­னர்.