மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது சாங்கி விமான நிலைய இரண்டாம் முனையம்

மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது சாங்கி விமான நிலைய இரண்டாம் முனையம்

1 mins read
e2575b06-967a-46c5-96ef-1366d96a053b
புதுப்பிக்கப்பட்ட சாங்கி விமான நிலைய இரண்டாம் முனையத்தில் தானியக்க முறையில் குடிநுழைவு நடைமுறைகளை விரைந்து முடித்துக்கொள்ள இயல்வதாகப் பயணிகள் கூறினர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சாங்கி விமான நிலை­யத்­தில் இரண்­டாம் முனை­யத்­தின் ஒரு பகுதி புதுப்­பிப்­புப் பணி­க­ளுக்­குப் பிறகு மீண்­டும் செயல்­ப­டத் தொடங்­கி­யுள்­ளது. 2020ஆம் ஆண்டு மே மாதம் புதுப்­பிப்­புப் பணி­க­ளுக்­காக மூடப்­பட்ட முனை­யம் நேற்று மீண்­டும் செயல்­ப­டத் தொடங்­கி­யது.

ஜெர்­ம­னி­யின் மியூனிக் நக­ரில் இருந்து வந்த சிங்­கப்­பூர் ஏர்லைன்ஸ் விமா­னம் எஸ்­கியூ327, நேற்று காலை மணி 7.12க்கு புதுப்­பிக்­கப்­பட்ட இரண்­டாம் முனை­யத்­திற்கு முத­லில் வந்­தி­றங்­கி­யது.

முனை­யத்­தின் பரந்த வடி­வ­மைப்பு, தானி­யக்க முறை­யி­லான குடி­நு­ழைவு நடை­மு­றை­கள் ஆகி­ய­வற்றை இந்த விமா­னத்­தில் வந்­தி­றங்­கிய பய­ணி­கள் பெரி­தும் வர­வேற்­ற­னர்.

விமான நிலைய ஊழி­யர்­கள் தங்­களை வர­வேற்க தேநீ­ரும், பிஸ்­கெட்­டு­களும் தந்­த­தா­கப் பய­ணி­கள் கூறி­னர்.

குடி­நு­ழைவு நடை­முறை விரை­வாக இடம்­பெற்­ற­தைப் பாராட்­டிய சிலர் வரி­வி­லக்கு அளிக்­கப்­பட்ட பொருள்­களை வாங்­கு­வ­தற்­கு­ரிய கடை­கள் மூடப்­பட்­டி­ருந்­தது குறித்து வருத்­தம் தெரி­வித்­த­னர்.

தானி­யக்க முறை­யில் குடி­நுழைவு நடை­மு­றை­க­ளைப் பூர்த்தி செய்ய 34 தடங்­கள் அமைக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­க­வும் ஏனைய 12 தடங்­களில் அதி­கா­ரி­கள் பணி­யில் ஈடு­பட்­டி­ருப்­பர் என்­றும் சாங்கி விமான நிலை­யக் குழு­மம் தெரி­வித்­தது.

கண்­வி­ழிப் பட­லம், அங்க அடை­யா­ளம் ஆகி­ய­வற்­றின் அடிப்­ப­டை­யில் செயல்­படும் தொழில்­நுட்ப முறைக்­குப் பதிந்­து­கொண்ட சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­த­ர­வா­சி­கள், வெளி­நாட்­டி­னர் தானி­யக்க குடி­நு­ழைவு நடை­மு­றை­யைப் பயன்­ப­டுத்­த­லாம்.

இரண்­டாம் முனை­யத்­தில் புதுப்­பிப்­புப் பணி­கள் இன்­னும் நடை­பெ­று­வ­தால் பய­ணி­களை வர­வேற்­கக் காத்­தி­ருப்­போ­ருக்கு உணவு, பானக் கடை­கள் இல்­லா­தது குறித்து சிலர் வருத்­தம் தெரி­வித்­த­னர். இம்முனையத்தில் புதுப்­பிப்­புப் பணி­கள் அடுத்த ஆண்டு நிறை­வ­டை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.