பக்கத்து வீட்டில் எதிர்பாராவிதமாக தீப்பிடித்தால் செய்ய வேண்டியவை பற்றி தீப் பாதுகாப்பு நிபுணர்கள் எடுத்துரைத்துள்ளனர்.
முதலாவதாக "தீ" என்று உரக்கக் கத்தி யாராவது சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையை அழையுங்கள் என்று உதவி கோர வேண்டும். தீ சிறிய அளவில் இருந்தால் சொந்தப் பாதுகாப்புக்கு பங்கம் நேராத வகையில் அந்த வீட்டில் உள்ளவர்கள் வெளியேற உதவலாம்.
உடனடியாக கட்டடத்தை விட்டு வெளியேற முடியாவிட்டால் வீட்டில் உள்ள அனைவரும் ஓர் அறைக்குச் சென்று கதவை மூடி புகை வராமல் ஈரத் துண்டைக் கொண்டு அடைத்துவிட்டு குடிமைத் தற்காப்புப் படையை அழைக்கலாம்.
சென்ற வாரம் பிடோக் நார்த் தீச் சம்பவத்தில் உதவிய சிறுவனின் துணிச்சல் பாராட்டுக்கு உரியது என்றாலும் காலணி அணியாமல் சென்றது அவனது பாதுகாப்புக்கு உகந்ததல்ல என்பதை நிபுணர்கள் சுட்டினர்.