தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கர்­நா­டக இசைக்­க­லை­ஞர்­க­ளாக இரட்­டைச் சகோ­த­ரர்­கள்

2 mins read
ae518af7-7d52-4ec0-927f-b1c3e1650737
இரட்­டை­யர்­கள் ஸ்ரீராம், கணேஷ். படம்: பாலா -

கி. ஜனார்த்­த­னன்

பாடல் காணொ­ளி­க­ளைத் தயா­ரிப்­ப­தற்­குத் தேவை சில நிமி­டங்­களே. ஆனால் பாடக் கற்­றுக்­கொள்­வதோ பல்­லாண்டு உழைப்பு. இதற்கு சான்­றாய் விளங்­கு­கின்­ற­னர் இரட்­டைச் சகோ­த­ரர்­க­ளான 25 வயது ஸ்ரீராம் பாலா, கணேஷ் பாலா. சிங்­கப்­பூ­ரில் பிறந்த இவர்­கள், தங்­க­ளின் காணொ­ளி­க­ளைச் சமூக ஊட­கங்­களில் வெளி­யிட்டு ரசி­கர்­களை ஈர்த்து வரு­கின்­ற­னர்.

கர்­நா­டக சங்­கீ­தப் பாடல்­க­ளு­டன் திரைப்­ப­டப்­பா­டல்­க­ளை­யும் பாடும் இவர்­கள், ஒரு மாதம் முன்­ன­தா­கத்­தான் தங்­க­ளின் இன்ஸ்­ட­கி­ராம் பக்­கத்­தைத் தொடங்­கி­னர். ஆனால் இன்று 143,000 பேர் அந்­தப் பக்­கத்­தைப் பின்­தொ­டர் கின்­ற­னர். பின்­தொ­டர்­வோ­ரில் திரை­யு­ல­கப் பிர­ப­லம் மாத­வ­னும் ஒரு­வர்.

சிங்­கப்­பூர் இந்­திய நுண்­க­லைக் கழ­கத்­தில் என் ஆர் பிர­சாந்த், பூர்ண பிரக்ஞ ராவ், ஸ்ரீவித்யா ஸ்ரீராம் ஆகி­யோ­ரி­டம் பயின்ற பின்­னர், புகழ்­பெற்ற இசைக்­க­லை­ஞர் அபி­ஷேக் ரகு­ரா­மி­டம் இணை­யக் காணொளி வழி­யாக ஏழு ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக இரட்­டை­யர்­கள் இசை கற்று வரு­கின்­ற­னர். விடு­மு­றை­யில் இந்­தி­யா­வுக்கே சென்­றும் அவ­ரி­டம் கற்­கின்­ற­னர்.

கர்­நா­டக இசை­யு­டன் இந்­துஸ்­தானி இசை, பாலி­வுட், ஜேஸ், ஹிப் ஹாப் உள்­ளிட்ட இசை வகை­

க­ளை­யும் தாங்­கள் ரசிப்­ப­தாக இவர்­கள் பகிர்ந்­த­னர்.

பயிற்­சி­யைத் தொடர்ந்­த­வாறே புதிய உத்­தி­க­ளைக் கையாண்டு தங்­க­ளின் ஆற்­றலை மேம்­ப­டுத்­த­வும் சகோ­த­ரர்­கள் முயன்று வரு­கின்­ற­னர். சிங்­கப்­பூர் பல­துறை தொழிற்­கல்­லூ­ரி­யில் ஓராண்டு இசை, ஒலி தயா­ரிப்­புத் துறை­யில் படித்­த­னர்.

அப்­போது அமெ­ரிக்­கா­வில் உள்ள பெர்க்லி பல்­க­லைக்­க­ழ­கத்­திற்­குத் தாங்­கள் விண்­ணப்­பித்­த­படி மானி­யம் கிடைத்­த­தால் பல­து­றைப் பட்­டப்­ப­டிப்பை நிறுத்­தி­ய­தா­கக் கூறி­னர்.

தேசிய சேவையை முடித்த பின்­னர் இவர்­கள் இரு­வ­ரும் 2018ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் அமெ­ரிக்கா சென்று, கடந்­தாண்டு இறு­தி­யில் தங்­க­ளது கல்­வியை முடித்­த­னர்.

கிரேமி விரு­தைப் பெற்ற புகழ்­பெற்ற தப்லா கலை­ஞர் ஸாக்­கிர் ஹுசே­னு­டன் ஒரே மேடை­யில் பாடி­யது தங்­க­ளது கல்வி அனு­ப­வத்­தின்­போது மறக்க முடி­யாத ஒன்று எனக் கூறி­னர் இரட்­டை­யர்­கள்.

மிரு­தங்­கத்­தைப் பொழு­து­போக்­கிற்­காக வாசிக்­கும் தங்­கள் தந்­தையே, இசை மீதான ஆர்­வத்தை வித்­திட்­ட­தா­கச் சகோ­த­ரர்­கள் கூறி­னர். இசைத்­து­றை­யில் படிக்க தம் மகன்­கள் எடுத்த முடி­வைத் தாம் வர­வேற்­ற­தா­கக் கூறி­னார் திரு பால நாரா­ய­ணன்.

"இவர்­கள் படிக்க விரும்­பும் துறை­யில் முத­லில் இவர்­க­ளுக்­குத் திறமை உள்­ளதா என்­பதே என் அக்­கறை. திறமை இல்­லை­யென்­றால் எந்­தத் துறை­யாக இருந்­தா­லும் அதில் முன்­னேற்­றம் இருக்­காது," என்று அவர் கூறி­னார்.

அமெ­ரிக்­கா­வி­லும் ஐரோப்­பா­வி­லும் இசை நிகழ்ச்­சி­களை நடத்­தப்­போ­கும் இவர்­கள், மீண்­டும் சிங்­கப்­பூ­ருக்­குத் திரும்பி இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த ஆசைப்­ப­டு­கின்­ற­னர். இசைக்­

க­லை­ஞர்­க­ளின் வளர்ச்­சிக்கு அதிக வாய்ப்­ப­ளிக்­கும் இட­மாக சிங்­கப்­பூர் இருப்­ப­தா­கக் கூறு­கி­றார்­கள் இந்த இசை ஆர்­வ­லர்­கள்.