மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் ஹங்காங்கின் வளர்ச்சி, தொடரும் வளப்பம் ஆகியவை குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாமுடனான சந்திப்பில் நேற்று அவர் அவ்வாறு கூறினார்.
'ஒரு நாடு, இரு ஆட்சிமுறை' கட்டமைப்பின்கீழ் ஹாங்காங் தொடர்ந்து நன்மையடையும் என்று திரு டியோ திருமதி லாமிடம் கூறினார். சிங்கப்பூருக்கும் ஹாங்காங்கிற்கும் இடையிலான உறவுகள் சிறப்பதற்குத் திருவாட்டி லாம் அளித்த ஆதரவிற்கு அவர் நன்றி தெரிவித்தார்.
நகர்ப்புற மேம்பாடு, கல்வி, கலை, கலாசாரம் போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் தொடர்பில் இரு தலைவர்களும் கலந்துரையாடினர். ஹாங்காங்கில் தேர்தலுக்குப் பிறகு பொறுப்பேற்கவிருக்கும் புதிய தலைவர்களையும் பதவி ஓய்வுபெறும் தற்போதைய தலைவர்களையும் சந்திக்கத் திரு டியோ அங்கு சென்றுள்ளார்.
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் ஆகியோரும் மூத்த அமைச்சர் டியோவுடன் சென்றுள்ளனர்.

