பணிப்பெண்ணைத் துன்புறுத்தியவருக்குச் சிறை

பணிப்பெண்ணைத் துன்புறுத்தியவருக்குச் சிறை

1 mins read
bfaa6644-3664-48e8-b7dd-207b75f914c2
-

பணிப்­பெண்­ணைத் தொடர்ந்து பல­முறை துன்­பு­றுத்­திய பெண்­ணுக்கு ஐந்து மாதச் சிறைத் தண்­ட­னை­யும் $1,000 அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டது. 35 வயது சாவ் லின் தமது மகன் கண் முன்னே மியன்­மா­ரைச் சேர்ந்த தமது பணிப்­பெண்­ணைத் துன்­பு­றுத்­தி­ய­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

அக்­குற்­றங்­களை சாவ் புரிந்­த­போது அவர் தாதி­யா­கப் பணி­பு­ரிந்­து­கொண்­டி­ருந்­தார்.

பணிப்­பெண்­ணைத் துன்­பு­றுத்­தி­யது மட்­டு­மல்­லாது, அவர் ஒவ்­வொரு முறை­யும் ஏதே­னும் தவறு செய்­தால் அதற்­குத் தண்­டனை தரும் வகை­யில் சம்­ப­ளத்தை சாவ் குறைத்­தார்.

அவ­ரது பணிப்­பெண்­ணின் மாதச் சம்­ப­ளம் $500 என்­றும் அதை அவர் $200க்குக் குறைத்­த­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

துன்­பு­றுத்­தல் குற்­றங்­களை சாவ் ஒப்­புக்­கொண்­ணார். ஒரு­முறை அவர் அப்­பெண்­ணின் முகத்­தில் தொடர்ச்­சி­யா­கப் பத்து முறை அறைந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

அத்­து­டன் பணிப்­பெண்ணை அவர் மிரட்­டி­ய­தா­க­வும் நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

தமக்கு இழைக்­கப்­படும் இன்­னல்­களை சகித்­துக்­கொள்ள முடி­யா­மல் காவல்­து­றை­யி­ன­ரு­டன் தொடர்பு கொண்டு புகார் செய்­தார் அப்­ப­ணிப்­பெண்.

அத­னைத் தொடர்ந்து சாவ்­வின் வீட்­டிற்­குச் சென்ற காவல்­துறை அதி­கா­ரி­கள் அங்­கி­ருந்த கண்­கா­ணிப்பு கேம­ரா­வில் பதி­வான காட்­சி­க­ளைப் பார்த்­த­னர்.

பாதிக்­கப்­பட்ட பணிப்­பெண் மருத்­து­வ­ம­னைக்கு அனுப்­பப்­பட்­டார்.

அங்கு அவ­ருக்கு நெற்­றி­யி­லும் மற்ற உடற்­ப­கு­தி­க­ளி­லும் காயங்­கள் இருப்­பது தெரி­ய­வந்­தது.

சாவ் $15,000 பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளார். ஜூன் மாதம் 13ஆம் தேதி­யன்று அவர் தமது சிறைத் தண்­ட­னை­யைத் தொடங்­கு­வார்.