சிங்கப்பூர் ஆயுதப் படையில் குறிப்பிட்ட சில வேலைகளுக்குத் தகுதி யானோரின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய திறன் சோதனைத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கூடுதல் ராணுவ வீரர்களை மேலும் அர்த்தமுள்ள பணிகளில் ஈடுபடுத்த அண்மைய ஆண்டு
களாக ஆயுதப் படை நடைமுறைப்
படுத்தியுள்ள திட்டத்தின் ஒரு
பகுதியாக இது விளங்குகிறது.
ஆயுதப் படையின் இயன் சிகிச்சை நிபுணர்கள் ராணுவ வீரர்
களைச் சோதித்துப் பார்ப்பர் என்று தெரிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட வேலைக்குத் தேவையான உடற்திறன், தகுதி அவர்களுக்கு
உள்ளதா என்று சோதனைகள் மூலம் கண்டறியப்படும்.

