சிங்கப்பூரின் நூற்றாண்டுக்கு மாணவர்களின் பங்கு அவசியம்: கல்வி அமைச்சர் சான்

சிங்கப்பூரின் நூற்றாண்டுக்கு மாணவர்களின் பங்கு அவசியம்: கல்வி அமைச்சர் சான்

2 mins read
2019761f-3d32-4ed3-b8ab-9af18f87b977
தொடக்கக் கல்லூரி, பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள் உட்பட 550 பேர் கருத்தரங்கில் கலந்து கொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஒவ்­வொரு தலைமுறையும் முன்­னோ­டித் தலை­மு­றை­யி­ன­ரா­கத் திகழ வேண்­டும் என்று கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் தெரி­வித்­துள்­ளார்.

தேசிய தொடக்­கக் கல்­லூ­ரி­யில் நேற்­றுக் காலை நடை­பெற்ற புகு­முக வகுப்­புக் கருத்­த­ரங்­கில் பங்­கேற்று 550 புகு­முக வகுப்பு மாண­வர்­க­ளி­டையே திரு சான் உரை­யாற்­றி­னார்.

"சிங்­கப்­பூ­ரின் 100வது ஆண்­டு­ வி­ழா­வுக்கு வழி­ந­டத்­திச் செல்­லக்­கூ­டிய பொறுப்பு மாண­வர்­க­ளுக்கு உள்­ளது.

"நம்­பிக்கை, ஆர்­வம், தலை­

மு­றைத் தொடர்பு போன்ற நற்­பண்பு­ கள் மூலம் மாண­வர்­கள் வெற்றி நடை போட வேண்­டும்.

"நமக்கு முந்­திய தலை­மு­றை­யி­னர் உல­கப் பொரு­ளி­யல் மந்­தம், எண்­ணெய் நெருக்­கடி போன்ற சவால்­க­ளைக் கடந்து வந்­துள்­ளார்­கள். அதனை முன்­னு­தா­ர­ண­மாகக் கொண்டு இன்­றைய இளை­யர்­கள் தனித்­துச் சிறந்­தோங்க வேண்­டும்.

"கால­னித்­துவ ஆதிக்­கத்­தி­லி­ருந்து விடு­தலை பெற்ற பின்­னர் வளர்ச்சி காணத் தொடங்­கிய இந்­தோ­னீ­சியா, மலே­சியா, சிங்­கப்­பூர் ஆகி­ய­வற்­றுக்கு இடை­யில் ஆயு­தப் பூசல் நில­விய காலம் கோன்­ஃபி­ராண்­டாசி என்­ப­தா­கும்.

"இது­போன்ற நெருக்­கடி மற்­றும் சவால்­களை எதிர்­நோக்­கி­ய­தன் விளை­வாக சிங்­கப்­பூ­ரர்­க­ளின் வலிமை கூடி­யது.

"இளைய தலை­முறை 2020ஐ கடந்து எஸ்ஜி100 என்­பதை நோக்கி வழி­ந­டத்­திச் செல்ல வேண்­டும்," என்­றார் அமைச்­சர் சான்.

சிங்­கப்­பூ­ரின் இன்­றைய இளை­யர்­கள் எதிர்­கொள்ள வேண்­டிய இடையூ­று­கள் குறித்­தும் திரு சான் விளக்­கி­னார்.

போட்டி நிறைந்த புவி­சார் அர­சி­யல் சூழல், பொரு­ளி­யல் உரு­மாற்­றம், உல­க­ளா­விய மின்­னி­லக்க முனை­யாக சிங்­கப்­பூரை நிலை­

நி­றுத்­து­தல் போன்­ற­வற்­றைக் கடந்து இளை­யர்­கள் வர­வேண்­டும் என்­றார் அவர்.

உல­கத்­து­ட­னும் இந்த வட்­டா­ரத்­து­ட­னும் மாண­வர்­கள் இணைந்­தி­ருக்க வேண்­டும் என்­றும் அவர் கேட்­டுக்­கொண்­டார்.

தொடக்­கக் கல்­லூரி, பல­து­றைத் தொழிற்­கல்­லூரி, இதர புகு­மு­கக் கல்வி நிறு­வ­னங்­கள் போன்­ற­வற்­றைச் சேர்ந்த மாண­வர்­கள் நேற்று புக்­கிட் தீமா­வில் உள்ள இரண்டு உரை அரங்­கு­களில் திரண்­டி­ருந்­த­னர்.

வருடாந்திரக் கருத்தரங்கிலும் அவர்கள் பங்கேற்றனர்.