செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
704fb5ef-ee08-45f8-8a0e-8594c90003ac
-

பூகிஸ் எம்ஆர்டி நிலையத்தில் சோதனைக்காக கூடுதல் நேரம்

பொதுப் போக்­கு­வ­ரத்து அவ­சர ஆயத்­த­நிலை பயிற்சி ஜூன் 6ஆம் தேதி பூகிஸ் எம்­ஆர்டி நிலை­யத்­தில் நடத்­தப்­பட உள்­ளது. அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடை­பெ­றும் பயிற்சி நட­வ­டிக்­கை­யின்­போது பய­ணி­கள் 'மெட்­டல் டிடெக்­டர்' என்­னும் உலோ­கம் கண்­ட­றி­யும் வாயி­லைப் பயன்­ப­டுத்த வேண்­டி­­யி­ருக்­கும். அத்­து­டன் அவர்­க­ளின் உடை­மைகள் எக்ஸ்-ரே இயந்­தி­ரங்­கள் மூலம் சோதிக்­கப்­படும். பொது இடங்­களில் பாது­காப்பை மேம்­ப­டுத்­தும் ஒரு முயற்­சி­யாக இது இடம்­பெ­று­கிறது. சிங்­கப்­பூர் எதிர்­கொள்­ளும் பாது­காப்பு அச்­சு­றுத்­தல்­கள் தொடர்­பாக பொது­மக்­க­ளி­டம் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வும் இதற்கு ஏற்­பாடு செய்­யப்­பட்டுள்­ளது. பாது­காப்பு சோத­னை­க­ளுக்கு உட்­பட வேண்டி இருப்­ப­தால் பூகிஸ் எம்­ஆர்டி நிலை­யத்­தில் பய­ணி­க­ளுக்­குக் கூடு­தல் நேரம் தேவைப்­ப­ட­லாம் என்று நிலப்­போக்­கு­வ­ரத்து ஆணை­ய­மும் எஸ்­பி­எஸ் டிரான்­ஸிட், எஸ்­எம்­ஆர்டி ஆகிய பொதுப் போக்­கு­வ­ரத்து நிறு­வ­னங்­களும் நேற்று கூட்­டா­கத் தெரி­வித்­தன.

கட்டட உச்சியிலிருந்து கீேழ விழுந்த ஊழியர் மாண்டார்

பங்­ளா­தே­ஷைச் சேர்ந்த 37 வயது ஊழி­யர் 20 மீட்­டர் உய­ரத்­தி­லி­ருந்து கீேழ விழுந்­தார். இச்­சம்­ப­வம் மே 24ஆம் தேதி காலை 10.45 மணி­ய­ள­வில் 16 வெஸ்ட் கோஸ்ட் கிரெ­சன்ட்­டில் நடை­பெற்­றது. அங்­குள்ள கன்­டோ­மி­னிய வீடு ஒன்­றின் உச்­சி­யில் வேலை செய்­து­கொண்­டி­ருந்­த­போது கீழே விழுந்த அந்த ஊழி­யர் தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டார். இருப்­பி­னும் அவர் உயிர்­பி­ழைக்­க­வில்லை என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்­தா­ளி­டம் மனித­வள அமைச்சு கூறி­யது. சம்­ப­வம் பற்றி விசா­ரணை நடத்­திய அமைச்சு, உயரே இருந்து செய்­யக்­கூ­டிய வேலை­கள் அனைத்­தை­யும் உட­ன­டி­யாக நிறுத்த உத்­த­ர­விட்­டது.

சிங்­கப்­பூ­ரில் இந்த ஆண்­டின் தொடக்­கம் முதல் மே 6ஆம் தேதி வரை 20 வேலை­யிட மர­ணங்­கள் நிகழ்ந்­தன. இவற்­றில் 10 உயி­ரி­ழப்­பு­கள் ஏப்­ரல் மாதத்­தில் மட்­டும் நிகழ்ந்­தவை. இது­போன்று வேையிடங்­களில் மர­ணம் நிகழ்­வதை ஏற்­றுக்­கொள்ள இய­லாது என்று பிர­த­மர் லீ சியன் லூங் மே 9ஆம் தேதி தமது ஃபேஸ்புக் பதி­வில் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

சுகாதாரப் பராமரிப்பில் கொவிட்-19 ஏற்படுத்திய தொழில்நுட்ப மாற்றம்

சுகாதாரப் பராமரிப்பில் தொழில்நுட்ப மாற்றத்தைத் தூண்டி விட கொவிட்-19 கொள்ளைநோய் முக்கிய பங்காற்றியது. அந்தத் துறையில் மின்னிலக்கத் தீர்வுகளைத் தொடர்ந்து விரிவுபடுத்த சமூகம் முயலவேண்டும் என்று நிபுணர் குழு ஒன்று ஆலோசனை தெரிவித்துள்ளது. இதற்கு, இதர எல்லா வற்றையும்விட நம்பிக்கை மிகவும் முக்கியம் என்றும் அது கூறியது. சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங் யி காங், மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன், டாக்டர் எனிவேர் அமைப்பின் தலைமை நிதி அலுவலர் எட்வின் பாசுகி, சீனாவின் நிதிச் சேவை நிறுவனத்தைச் சேர்ந்த ஜெசிக்கா டான் ஆகியோரை உள்ளடக்கியது இந்தக் குழு.

"கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கு முன்னர் சாதிக்க முடியாத பல அம்சங்களை இப்போது நிறைவேற்ற முடி கிறது. இதற்கு மின்னிலக்கக் கருவிகள் முக்கிய காரணம்," என்று திரு ஓங் தெரிவித்தார்.

சிங்கப்பூர் நிகழ்வுகளில் பங்கேற்கும் இந்தோனீசிய அமைச்சர்

இந்­தோ­னீ­சி­யா­வின் பொரு­ளி­யல் விவ­கார ஒருங்­கி­ணைப்பு அமைச்­சர் ஏர்­லாங்கா ஹார்­டார்டோ சிங்­கப்­பூர் வருைக மேற்­கொண்­டுள்­ளார். இங்கு இருக்­கும்­போது பிர­த­மர் லீ சியன் லூங், வெளி­யு­றவு அமைச்­சர் விவியன் பால­கி­ருஷ்­ணன், வர்த்­தக தொழில் அமைச்­சர் கான் கிம் யோங், போக்­கு­

வ­ரத்து அமைச்­சர் எஸ் ஈஸ்­வ­ரன், தொடர்பு தக­வல் அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ ஆகி­யோ­ரைச் சந்­திக்­கவும் இங்கு நடைபெறும் ஆசிய தொழில்நுட்ப உச்சநிலைக் கூட்டத்தில் பங்கேற்கவும் அவர் திட்­ட­மிட்டிருந்­த­தாக சிங்­கப்­பூர் வெளி

­யு­றவு அமைச்சு தெரி­வித்­தது.