புக்கிட் பாத்தோக் பேருந்து விபத்து: முன்னாள் ஓட்டுநருக்கு ஆறு வாரச் சிறை

புக்கிட் பாத்தோக் பேருந்து விபத்து: முன்னாள் ஓட்டுநருக்கு ஆறு வாரச் சிறை

2 mins read
49103f00-8a2c-4023-a1b9-b4d676db9209
-

புக்­கிட் பாத்­தோக் பேருந்து நிலை­யத்­தில் தாம் ஓட்­டிய பேருந்தை மற்­றொரு பேருந்­தின் மீது மோதி 14 பேருக்­குக் காயம் விளை­வித்த டவர் டிரான்­சிட் பேருந்து ஓட்­டு­நருக்கு நேற்று ஆறு வாரச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­யான லூ எங் சாய், 66 (படம்), ஐந்து ஆண்டு­க­ளுக்கு வாக­னம் ஓட்­ட­வும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நிகழ்ந்த இந்த விபத்­தில், கவ­னக்­கு­றை­வாக செயல்­பட்­ட­தால் ஆறு பேருக்­குக் கடு­மை­யான காயம் ஏற்­ப­டுத்­திய ஒரு குற்­றச்­சாட்டை அவர் ஒப்­புக்­கொண்­டார்.

கடு­மை­யாக காய­முற்­ற­வர்­களில் மற்­றொரு பேருந்து ஓட்­டு­ந­ரான திரு முகம்­மது சாலே மியான், 65, என்­ப­வ­ரும் திரு அலி­யாஸ் மோக்­சன், 57, என்­ப­வ­ரும் அடங்­கு­வர். இந்­தச் சம்­ப­வம் நிகழ்ந்­த­போது திரு அலி­யாஸ் பேருந்து நிலை­யத்­தில் ஓய்­வெ­டுத்­துக்­கொண்­டி­ருந்­தார்.

கவ­னக்­கு­றை­வாக செயல்­பட்டு, திரு சாலே­ ஓட்டிய பேருந்­தில் இருந்த எட்­டுப் பய­ணி­க­ளுக்­குக் காயம் விளை­வித்­த­தாக மற்­றொரு குற்றச்­சாட்­டும் லூவுக்­குத் தண்­டனை விதிப்­ப­தில் கருத்­தில்­ எடுத்துக் கொள்­ளப்­பட்­டது.

2000ஆம் ஆண்­டி­லி­ருந்து பேருந்து ஓட்­டு­ந­ரா­கப் பணி­யாற்றி வந்த லூ, எதிரே வாக­னங்­கள் வரு­கின்­ற­னவா என்­ப­தைச் சரி­பார்க்­கா­மல் பேருந்தை வல­து­பு­றம் திருப்­பி­ய­தாக அரசுத் தரப்பு வழக்­க­றி­ஞர் சீ ஈ லிங் நேற்று நீதி­மன்­றத்­தில் கூறி­னார்.

திரு சாலே ஓட்­டிய பேருந்­தின் வல­து­பக்­கத்­தில் லூ பேருந்தை மோதி­னார். இந்த விபத்து கார­ண­மாக திரு சாலே­யின் பேருந்து பக்­க­வாட்­டில் சாய்ந்­தது.

திரு சாலே­யின் பேருந்­தில் இருந்த 13 பேர் உட்­பட விபத்­தில் காய­முற்ற 14 பேரும் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்லப்­பட்­ட­னர்.

இந்த வழக்­கில் லூவை வழக்­க­றி­ஞர் எவ­ரும் பிர­தி­நிதிக்­க­வில்லை. தற்­போது தாம் துப்­பு­ர­வா­ள­ரா­கப் பணி­யாற்­று­வ­தா­க­வும் ஜோகூர் பாரு­வில் வசிக்­கும் தம் குடும்­பத்­தா­ருக்கு ஆத­ர­வ­ளிக்க வேண்­டி­யி­ருப்­பதா­க­வும் லூ கூறி­னார்.

பேருந்து ஓட்­டு­நர் பணி­யி­ல் இ­ருந்து லூ நீக்­கப்­பட்­ட­தாக டவர் டிரான்­சிட் நிறு­வ­னம் முன்­ன­தாகக் கூறி­யி­ருந்­தது.