தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$1 மில்லியன் திருமண மொய்ப் பணத்திற்காக தம்பதியிடையே மோதல்

2 mins read
fd088b3d-d12a-4e1b-aac2-762ea764deb6
-

திரு­ம­ணத்­தின்­போது புது­ம­ணத் தம்­ப­திக்கு மொய்ப் பணம் கிடைப்­பது வழக்­கம். ஆனால், $1 மில்­லியன் மொய்ப் பணம் கிடைத்­த­தால் பின்­னர் மண­வி­லக்கு கோரிய தம்­ப­தி­யி­டையே நீதி­மன்­றத்­தில் பெரும் மோதல் ஏற்­பட்­டுள்­ளது.

சீனர்­களின் வழக்­கப்­படி பெற்­றோர்­க­ளுக்கு மரி­யாதை செலுத்­தும் தேநீர் திரு­ம­ணச் சடங்கு நடை­பெற்­றது. அந்­தச் சடங்­கின்­போது $1 மில்­லி­யன் காசோலை கொண்ட சிவப்பு உறையை மண­ம­க­னின் தந்தை தந்­தார்.

மூன்று ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு அந்­தத் தம்­பதி மண­வி­லக்கு கோரி­ய­போது அந்த $1 மில்­லி­யன் மொய்ப் பணம் தொடர்­பி­லும் கண­வ­ரின் 'சிங்­கப்­பூர் ஐலண்ட் கண்ட்ரி கிளப்' குழிப்­பந்­தாட்ட உறுப்­பி­னர் சலுகை தொடர்­பி­லும் தம்­ப­தி­யர் மோதிக்­கொண்­ட­னர்.

எண்­ணெய், எரி­வாயு நிறு­வ­னம் ஒன்­றின் தலைமை நிர்­வா­கி­யாக அந்­தக் கண­வ­ரும் தனி­யார் மருந்­த­கத்­தில் பல் மருத்­து­வ­ராக அந்த மனை­வி­யும் உள்­ள­னர்.

தங்­க­ளின் 30களில் இருக்­கும் அவர்­க­ளுக்கு ஏழு வய­தில் ஒரு மக­னும் இருக்­கி­றார்.

விலை மதிப்­பிற்­கு­ரிய சொத்து­களை எவ்­வாறு இரு­வ­ருக்­கி­டையே பங்கு போடு­வது என்­பது குறித்து மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்ற நீதி­பதி­கள் மூவர் முடி­வெ­டுத்த பிறகு, இந்­தத் தம்­ப­தி­யின் மண­வி­லக்கு, பிற்­கால வழக்­கு­க­ளுக்கு ஒரு மேற்­கோ­ளாக அமை­யும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

உயர் நீதி­மன்­றத்­திற்கு இந்த வழக்கு வந்­த­போது மக­னுக்கே அந்த மொய்ப் பணம் சேர­வேண்­டும் என்ற நோக்­கத்­து­டன் அந்த $1 மில்­லி­யனை அந்­தத் தந்தை வழங்­கி­யி­ருப்­ப­தாக முடி­வா­னது. அதே தேநீர் சடங்­கின்­போது மண­ம­க­ளுக்கு $20,000 மதிப்­பிலான நகை­கள் வழங்­கப்­பட்­டன.

திரு­ம­ணத்­திற்­கு­முன் மணப்­பெண்­ணுக்கு $270,000 மதிப்­பி­லான 'பிஎம்­ட­புள்யூ' கார் ஒன்­றை­யும் மண­ம­க­னின் தந்தை தந்­துள்­ளார்.

கண­வ­ரி­ட­மி­ருந்து மணப்­பெண்­ணுக்கு $100,000 மதிப்­பி­லான நகை­களும் கிடைத்­துள்­ளன.

இதற்­கி­டையே கண­வ­னு­டன் நடந்த ஓர் உரை­யா­டலை ரக­சி­ய­மா­கப் பதி­வு­செய்­தி­ருந்­தார் அந்த மனைவி. $1 மில்­லி­யன் மொய்ப் பணம் இரு­வ­ருக்­குமே சொந்­தம் என்று அந்­தக் கண­வர் ஒப்­புக்­கொள்­வ­தாக அந்­தப் பதி­வில் அமைந்­துள்­ளது.

மண­ம­க­னின் தந்தை குறிப்­பாக ஏன் முக்­கி­ய­மா­கக் கரு­தப்­படும் தேநீர் சடங்­கின்­போது அந்த மொய்ப் பணத்­தைத் தர­வேண்­டும் என்­றும் மேல்­மு­றை­யீட்டு நீதி­பதி வின­வி­னார். தம்­ப­தி­யின் திரு­மணம் சார்ந்த சொத்­து­களில் ஒன்­றாக அந்த மொய்ப் பணம் கரு­தப்­படும் என்­றும் அது இரு­வ­ருக்­கும் பிரித்­துத் தரப்­படும் என்­றும் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.