கடவுச்சீட்டு: நேரம் ஒதுக்கப்பட்ட மனுதாரர்களுக்கு மட்டும் அனுமதி

கடவுச்சீட்டு: நேரம் ஒதுக்கப்பட்ட மனுதாரர்களுக்கு மட்டும் அனுமதி

2 mins read
2964a4c6-9f5d-4ca9-ab15-6a69fb58b97e
-

கட­வுச்­சீட்டு (பாஸ்­போர்ட்) மனு­தாரர்­களில் அதி­கா­ரி­க­ளைப் பார்க்க ஏற்­கெ­னவே நேரம் குறிக்­கப்­பட்­ட­வர்­கள் மட்­டுமே நாளை முதல் குடி­நு­ழைவு, சோத­னைச்­சாவடி ஆணை­யக் கட்­ட­டத்­திற்­குள் செல்ல முடி­யும்.

அவ­ச­ர­மா­கப் பய­ணம் செய்ய வேண்­டிய நிலை இருக்­கிறது; ஆனால், அதி­கா­ரி­க­ளைப் பார்க்க நேரம் குறிக்­கப்­ப­ட­வில்லை என்­றால் அவர்­கள், இணை­யம் மூலம் விண்­ணப்­பத்­தைத் தாக்­கல் செய்ய வேண்­டும் என்று ஆணை­யம் நேற்று தெரி­வித்­தது.

அப்­படி செய்ய இய­லா­த­வர்­கள் ஆணை­யத்­தின் கட்­ட­டத்­திற்­குச் சென்று அதி­கா­ரி­க­ளின் உத­வி­யுடன் அங்­குள்ள கணி­னி­கள் மூலம் விண்­ணப்­பிக்­க­லாம். இந்­தப் புதிய ஏற்­பாடு கட­வுச்­சீட்டு சேவை­களுக்கு மட்­டும்­தான் பொருந்­தும். இதர சேவை­களுக்கு இந்த ஏற்­பாடு பொருந்­தாது.

சிங்­கப்­பூர் தனது எல்­லை­களை கடந்த ஏப்­ரல் மாதம் பரந்த அள­வில் திறந்­து­விட்­டது. அதனை தொடர்ந்து ஆணை­யத்­தின் கட்­டடத்­தில் நீண்ட வரிசை காணப்­படு­கிறது. கட்­ட­டத்­தின் உள்ளே செல்­லும் மக்­க­ளின் எண்­ணிக்­கையைக் கட்­டுப்­ப­டுத்த வேண்­டிய சூழ்­நிலை ஏற்­பட்டு இருக்­கிறது.

தங்­க­ளு­டைய விண்­ணப்­பங்­கள் பற்றி தெரிந்­து­கொள்ள பல­ரும் அலு­வ­ல­கம் வந்­தி­ருக்­கி­றார்­கள். விரை­வாக கட­வுச்­சீட்டு­களை வழங்­கும்­படி அவர்­கள் கேட்­டுக்­கொள்­கி­றார்­கள்.

இதன்­வி­ளை­வாக கூடு­த­லான அதி­கா­ரி­க­ளைப் பணி­யில் அமர்த்த வேண்­டிய சூழ்­நிலை ஏற்­பட்டு இருப்­ப­தாக ஆணை­யம் தெரி­வித்­தது.

குறிப்­பி­டப்­பட்ட நேரத்­தில் வந்து கட­வுச்­சீட்­டைப் பெற்­றுக்­கொள்­ளும்­படி கேட்­டுக்­கொள்­ளப்­பட்டு இருக்­கும் விண்­ணப்­ப­தா­ரர்­கள், ஒன்று அல்­லது அதற்­கும் மேற்­பட்ட அத்­தாட்சி சான்­றி­தழ்­க­ளைக் காட்டி கட்­ட­டத்­தின் உள்ளே செல்ல வேண்டும். அப்­படி வரு­வோர்­ கூட்­டத்தைக் குறைத்­தும்கொள்­ளும் வகை­யில் தனி­யாக வரும்­ப­டி­ ஆணை­யம் ஆலோ­சனை கூறியது.

நாடு முழு­வ­தும் இருக்­கும் 27 அஞ்­ச­ல­கங்­களில் ஏதா­வது ஒன்­றில் இருந்து தங்­கள் கட­வுச்­சீட்டைப் பெற்­றுக்­கொள்­ளும்­படி விண்­ணப்­ப­தா­ரர்­களை ஆணை­யம் கேட்டுக்­கொள்­கிறது.

கட­வுச்­சீட்டு விண்­ணப்­பங்­கள் 2022 மார்ச் முதல் அதி­க­ரித்துள்ளன. முன் ஒரு­போ­தும் இல்­லாத வேகத்­தில் கட­வுச்­சீட்­டு­க­ளைத் தயா­ரித்து ஆணை­யம் அவற்றை வழங்கி வரு­கிறது. நாள் ஒன்­றுக்கு 5,000க்கும் மேற்­பட்ட கட­வுச்­சீட்­டு­கள் இப்­போது வழங்­கப்­ப­டு­கின்­றன.

இதைச் சாதிக்க அதிக அதி­கா­ரி­கள் 24 மணி நேர­மும் பணி­யாற்­றி­வ­ரு­கிறார்­கள்.