செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
98ffd972-f613-4ee9-8c99-915b4d6d07f4
-

நாளை விடைபெறும் கட்டுப்பாடு:

இரவுநேர வர்த்தகர்கள் வரவேற்பு

இரவுநேர பொழுதுபோக்குக்கூடங்களுக்குச் செல்ல நாளை (ஜூன் 14) முதல் ஏஆர்டி பரிசோதனை செய்யத் தேவை இல்லை. கடந்த வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சு வெளி யிட்ட இந்த அறிவிப்பு பொழுதுபோக்கு ஆர்வலர்கள் பலரை யும் கவர்ந்துள்ளது. வர்த்தகம் வழக்கநிலைக்குத் திரும்பு வதை எதிர்பார்த்திருக்கும் தமது சங்கத்தின் உறுப்பினர்கள் இந்த அறிவிப்பைப் பெரிதும் வரவேற்றுள்ளதாக சிங்கப்பூர் இரவுநேர பொழுதுபோக்கு வர்த்தகச் சங்கத்தின் தலைவர் நேசன் தியாகராஜன் கூறினார். பொழுதுபோக்குக் கூடத்திற் குள் நுழையும் ஒவ்வொரு முறையும் ஏஆர்டி பரிசோதனைக் காக $12 செலவிட வேண்டி இருந்ததாகவும் இனி அந்தத் தொகை மிச்சப்படும் என்றும் மார்க்கஸ் டியோ என்னும் வாடிக்கையாளர் கூறினார்.

கோழி விநியோகத் தடை நீடித்தால் அரசாங்கம் உதவும்: கிரேஸ் ஃபூ

கோழி இறைச்சி விநி­யோக இடை­யூறு நீண்­ட­கா­லத்­திற்கு நீடிக்­கு­மா­யின், பாதிக்­கப்­படும் வர்த்­த­கர்­க­ளுக்­கும் கடைக்­

கா­ரர்­க­ளுக்­கும் அர­சாங்­கம் உத­வும் என்று நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சர் கிரேஸ் ஃபூ தெரி­வித்­துள்­ளார். கோழி ஏற்­று­ம­திக்கு மலே­சியா விதித்­தி­ருக்­கும் தடை இங்­குள்ள வர்த்­த­கங்­களை எவ்­வாறு பாதித்­துள்­ளது என்­பதை அறிந்­துள்ள அர­சாங்­கம், அது­பற்றி அணுக்­க­மா­கக் கவ­னித்து வரு­வ­தா­க­க் குறிப்­பிட்ட அவர், தேவை ஏற்­ப­டும்­பட்­சத்­தில் அர­சாங்­கம் உத­விக்­க­ரம் நீட்­டும் என்­றார்.

கோழி தட்­டுப்­பாடு கார­ண­மா­க­வும் விநி­யோ­கத்­தை­யும் விலை­யை­யும் நிலைப்­ப­டுத்­தும் நோக்­கத்­து­ட­னும் ஜூன் 1 முதல் கோழி ஏற்­று­மதியை மலே­சியா தடை செய்தது. சிங்­கப்­பூ­ரில் பயன்­ப­டுத்­தப்­படும் கோழி இறைச்­சி­யில் மூன்­றில் ஒரு பங்கு மலே­சி­யா­வில் இருந்து வந்­து­கொண்­டி­ருந்­தது.

சனிக்­கி­ழமை மாலை செந்­தோ­சா­வில் நடை­பெற்ற சிங்­கப்­பூர் இறைச்சி வர்த்­த­கர் சங்க விருந்து நிகழ்ச்­சி­யில் உரை­யாற்­றிய திரு­வாட்டி ஃபூ, தடை­யின் தாக்­கம் பற்றி பேசி­னார்.

கோழி இறைச்சி விநி­யோ­கப் பிரச்சினை தொடர்ந்து நீடிக்குமாயின், தேசிய சுற்­றுப்­புற வாரி­ய­மும் சிங்­கப்­பூர் உணவு அமைப்­பும் நிலை­மையை ஆராய்ந்து, உதவி தேவைப்­படும் வர்த்­த­கங்­க­ளுக்­கும் கடைக்­கா­ரர்­க­ளுக்­கும் ஆத­ரவு வழங்­கும் என்று அவர் கூறி­னார்.

கடந்த ஆண்டு கொவிட்-19 கொள்ளைநோய் ஜூரோங் மீன்பிடித் துறைமுகப் பணிகளில் இடையூறு ஏற்படுத்திய போது அரசாங்கம் உதவ முன்வந்ததை அவர் உதாரண மாகச் சுட்டினார். பாதிக்கப்பட்ட கடைக்காரர்களுக்கு வாடகைக் கழிவு அல்லது வாடகைக் குறைப்பு அறி விக்கப்பட்டதாக அப்போது தகவல்கள் வெளியாயின.

சிங்கப்பூரிடம் பொருளியல்

உதவி கோரிய இலங்கை

இலங்கை தனது பொரு­ளி­யல் பிரச்­சி­னை­களைத் தீர்க்­கும் பொருட்டு, முத­லீ­டு­கள், ஏற்­று­மதி வாய்ப்­பு­கள், வேலை வாய்ப்­பு­ ஆகி­ய­வற்­றில் சிங்­கப்­பூ­ரின் உத­வியை கோரி­யுள்­ளது. இம்­மா­தம் 8, 9 தேதி­களில் சிங்­கப்­பூ­ருக்கு இரு­நாள் அதி­கா­ர­பூர்வ வருகை மேற்­கொண்ட இலங்கை வெளி­யு­றவு அமைச்­சர் ஜி.எல். பெரீஸ் இந்த உத­வி­யைக் கோரி­யதாக நம்பப்படுகிறது.

இலங்கை பொரு­ளி­யல் நெருக்­கடி பற்றி விளக்­க­ம­ளித்த அவர், அதைச் சமா­ளிக்க சிங்­கப்­பூர் அர­சாங்­கத்­தி­டம் தற்­கா­லிக நிதி உத­வி­யைக் கோரி­னார் என்று இலங்கை ஊட­கங்­கள் தெரி­வித்­தன. இலங்­கை­யில் நேரடி முத­லீ­டு­க­ளை­யும், அந்­நாட்­டின் ஏற்­று­ம­தி­க­ளுக்­கான வாய்ப்­பு­க­ளை­யும் சிங்­கப்­பூர் அதி­க­ரிப்­ப­தோடு இலங்­கை­வா­சி­க­ளுக்கு அதிக வேலை­வாய்ப்­பு­க­ளைப் பெற்­றுத்­தர சிங்­கப்­பூர் அர­சாங்­கத்­தின் ஆத­ரவை திரு பெரீஸ் கோரி­னார் என்று கூறப்­பட்­டது.

வெளி­யு­றவு அமைச்­சர் டாக்­டர் விவி­யன் பால­கி­ருஷ்­ண­னின் அழைப்­பின் பேரில் அவர் சிங்­கப்­பூர் வந்­தி­ருந்­தார்.

இலங்கை வெளி­யு­றவு அமைச்­சர் ஒரு­வர் சிங்­கப்­பூ­ருக்கு அதி­கா­ரத்­துவ வருகை மேற்­கொண்­டி­ருப்­பது நான்கு ஆண்டு ­க­ளுக்­குப் பின் இதுவே முதல்­முறை. கொவிட்-19 பர­வ­லின்­போது இலங்­கைக்­குத் தேவை­யான மருத்­து­வப் பொருள்­ க­ளை­யும் சாத­னங்­க­ளை­யும் வழங்­கி­ய­தற்­காக

சிங்­கப்­பூ­ருக்கு திரு பெரீஸ் நன்றி தெரி­வித்­தார்.