புற்றுநோய் சிகிச்சையின் ஆற்றலை மேம்படுத்தும் தொழில்நுட்பம்

புற்றுநோய் சிகிச்சையின் ஆற்றலை மேம்படுத்தும் தொழில்நுட்பம்

1 mins read
707f0fac-b4ab-4448-baab-99728b679145
-

சிங்­கப்­பூ­ரில், மருந்துமூலம் நோய் தணிப்பு சிகிச்சை அளிக்கக்கூடிய 'கீமோ­தெ­ரபி' தேவைப்படும் புற்­று­

நோ­யா­ளி­கள், பக்­க­வி­ளை­வு­கள் குறைந்த, ஆற்­றல்­மிக்க சிகிச்­சையை இனி பெற­மு­டி­யும். இதற்கு செயற்கை நுண்­ண­றிவு உத­வும். 'கியூ­ரேட்.ஏஐ' என்­னும் தொழில்­நுட்­பம், 'கீமோ­தெ­ரபி' சிகிச்சை காலம் முழு­வ­தும் தேவைப்­படும் மருந்­தின் அளவை பரிந்­து­ரைக்­கிறது. இதன் மூலம் பக்­க­வி­ளைவு குறை­வ­தோடு, சிகிச்­சை­யின் பலன் அதி­க­ரிக்­கிறது.

இது குறித்து சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் உயிர்­ம­ருத்­துவப் பொறி­யி­யல் துறைத் தலை­வர் பேரா­சி­ரி­யர் டீன் ஹோ விளக்­கி­னார்.

"பொது­வாக 'கீமோ­தெ­ரபி' சிகிச்­ சைக்கு, நிர்­ணயிக்­கப்­பட்ட நிலை­யான அள­வி­லேயே மருந்­து­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன. பக்­க­வி­ளைவு ஏற்­பட்­டால் அதற்­கேற்ப அந்த அள­வில் மாற்­றம் செய்­யப்­ப­டு­கிறது.

"இத­னால் நோயா­ளி­க­ளுக்­குப் பெரிதாகப் பலன் கிட்­டா­மல்­போ­க­லாம். அதற்­குப் பதி­லாக, தனிப்­

ப­யன்­பாட்­டுக்கு ஏற்ற வகை­யி­லான மருந்­து­களை வழங்­கு­வ­தன் மூலம் சிகிச்­சை­யின் ஆற்­றலை அதி­க­ரிக்­கலாம்," என்­றார் அவர்.