அடுத்த கொவிட்-19 அலை, கிருமியின் புதிய திரிபுகள், புதியவகை கிருமித் தொற்று ஆகியவற்றுக்குத் தாதிமை இல்லங்கள் தயாராக இருக்கவேண்டும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறியுள்ளார். ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் பணித்திட்டத்தில் அமைச்சர் பேசியபோது, இவ்வாறு சொன்னார்.
புதிய அலை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் நடக்க சாத்தியம் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மொத்த தொற்று சம்பவங்களைவிட தொற்றினால் கடுமையான உடல்நல பாதிப்பு ஏற்பட்டு அதனால் மருத்துவமனையில் சிகிச்சை நாடுவோரின் எண்ணிக்கையை நாம் கையாளுவது முக்கியம் என் திரு ஓங் குறிப்பிட்டார். இதனால் அனைத்து சுகாதார நிலையங்களும் தயாராக இருக்கவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தடுப்பூசி போட்டுக்கொள்வது, கிருமித் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் சிங்கப்பூர் கொவிட்-19 கிருமித் தொற்றை சிறப்பாக சமாளித்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.