நுரையீரல் புற்றுநோய் ஆய்வுக்கு $25 மி. ஒதுக்கீடு

நுரையீரல் புற்றுநோய் ஆய்வுக்கு $25 மி. ஒதுக்கீடு

2 mins read
cf032cd5-6f64-4570-8aa7-9e4ec2bc0236
நுரையீரல் புற்றுநோயின் நோய் எதிர்ப்புத்திறன் அம்சங்களை ஆய்வுசெய்யும் மருத்துவர் திமத்தி ஷுவென். படம்: ஸ்ட்ரெயெட்ஸ் டைம்ஸ் -

அர­சாங்­கம் நுரை­யீ­ரல் புற்­று­நோய் தொடர்­பான புதிய ஆய்­வுக்கு 25 மில்­லி­யன் வெள்­ளியை ஒதுக்­கி­யுள்­ளது.

நுரையீரல் புற்றுநோய்க்கான ஆகச் சிறந்த சிகிச்சைமுறைகளைக் கண்டறிவது நோக்கம்.

ஐந்து ஆண்டுகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வி­ருக்­கும் இந்த ஆய்வை சிங்­கப்­பூர் தேசி­யப் புற்­று­நோய் நிலை­யம் வழி­ந­டத்­தும்.

நுரையீரல் புற்றுநோயாளிகளின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது புற்றுநோய்க்கட்டியுடன் தொடர்புடைய உடல் மாற்றங்களை ஆய்வாளர்கள் அடையாளம்காண முயல்வர். இதன் மூலம் தனிப்பட்ட சிகிச்சைமுறையை வடிவமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

நுரை­யீ­ரல் புற்றுநோய் இதர வகைப் புற்­று­நோய்­களில் இருந்து மாறு­பட்­டது. 'கீமோ­தெ­ரபி' எனும் பாரம்­ப­ரிய முறை சிகிச்சை முறை இதற்கு அதி­கம் பல­ன­ளிப்­ப­தில்லை.

எனவே நோயா­ளி­யின் உட­லில் தோன்­றக்­கூ­டிய மாற்­றங்­களை ஆய்வு­செய்து அதன் அடிப்­ப­டை­யில் இதற்கு ஆகச் சிறந்த சிகிச்சை முறை­யைக் கண்­டு­பி­டிக்க இந்த ஆய்வு முனை­யும் என்று ஆய்வை வழி நடத்­தும் சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னை­யின் மூத்த நிபு­ணத்­துவ மருத்­து­வ­ரான பேரா­சி­ரி­யர் பியர்ஸ் சோ கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரில் நுரை­யீ­ரல் புற்­று­நோய் ஆண்­களில் அதி­கம் காணப்­படும் மர­ணம் விளை­விக்­கக்­கூ­டிய மூன்­றா­வது நோயா­க­வும் பெண்­களில் இத்­த­கைய ஐந்­தா­வது நோயா­க­வும் விளங்­கு­கிறது.

நுரை­யீ­ரல் உட­லின் உள்ளே அமைந்­தி­ருக்­கும் உறுப்பு என்­ப­தால் இந்த வகைப் புற்றுநோயை ஆரம்­பக்­கட்­டத்­தில் கண்­டு­பி­டிப்­பது மிக­வும் சிர­மம் என்­றும் அறி­கு­றி­கள் தெரி­யும்­போதே நோய் முற்­றிய நிலையை எட்­டி­யி­ருக்­கும் என்­றும் பேரா­சி­ரி­யர் சோ கூறி­னார்.

தற்­போது நோய் எதிர்ப்­புச்­சக்­தியை அதி­க­ரிக்க உத­வும் 'இம்­யூ­னோ­தெ­ரபி' சிகிச்­சை­மு­றை­தான் நுரை­யீ­ரல் புற்று நோய்க்கு ஆகச் சிறந்த சிகிச்­சை­யா­கக் கரு­தப்­ப­டு­கிறது. ஆனால் 30 விழுக்­காட்டு நோயா­ளி­கள் மட்­டுமே இதன் மூலம் பல­ன­டை­வ­தா­கப் பேரா­சி­ரிய சோ குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூர் மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் ஆசிய-பசிபிக் வட்­டா­ரத்­தின் 11 மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் இந்த ஆய்வு நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­படும். அடுத்த மாதத்திலிருந்து நோயாளிகளுக்கு ஆய்வுரீதியிலான சிகிச்சை தொடங்கும்.