தண்டனை கடுமையாகிறது

தண்டனை கடுமையாகிறது

2 mins read
b27a0e15-e3fa-42a0-b81e-14e74d558271
-

வேலையிடப் பாதுகாப்பு விதிமீறல்களைக் கண்டறிய நிறுவனங்களில் சோதனை தீவிரம்

தரக்­கு­றை­வான வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தா­ரச் செயல்­பாட்­டைக் கொண்ட நிறு­வ­னங்­கள் இன்­று­ மு­தல் கடு­மை­யான தண்­ட­னை­யை எதிர்­நோக்­கும்.

பாது­காப்­புச் சோ­த­னை­யின்­போது கண்­ட­றி­யப்­படும் குற்­றங்­களுக்­கான அப­ரா­தங்­களை இரட்­டிப்­பாக்­கு­வது உள்­ளிட்­டவை இவற்­றில் அடங்­கும் என மனி­த­வள அமைச்சு தெரி­வித்­துள்­ளது. அதி­க­பட்ச அப­ரா­த­மாக $5,000 விதிக்­கப்­படும்.

நிறு­வ­னங்­க­ளுக்கு வேலை நிறுத்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டு இ­ருந்­தாலோ ஊழி­யர்­க­ளுக்கு கடுமை­யான காயங்­கள் ஏற்­பட்­டி­ருந்­தாலோ, தற்­போ­தைய நடை­முறையை மறு­ஆய்வு செய்ய வெளி­யி­லி­ருந்து கணக்­குத் தணிக்­கை­யா­ளர்­களை அவை ஈடு­ப­டுத்த வேண்­டும்.

டேஃபு லேனில் நேற்று நடத்­தப்­பட்ட வேலை­யி­டப் பாது­காப்­புச் சோ­த­னைக்­குப் பிறகு செய்­தி­யாளர்­க­ளி­டம் பேசிய மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி முகம்­மது, இந்த விவ­கா­ரத்தை கீழ் இருந்து மேலே எதிர்­கொள்­வது முக்­கி­யம் என்­றார்.

"பாது­காப்­பைப் பொறுத்­த­மட்­டில், வேலை­யி­டத்­தில் நிறு­வ­னங்­கள் கூடு­தல் பொறுப்­பு­ணர்வுடன் நடந்து கொள்ள வேண்­டும் என்­பது அண்­மை­யில் நாங்­கள் மேற்­கொண்ட சோ­த­னை­களில் தெளி­வா­கத் தெரிகிறது," என்று திரு ஸாக்கி கூறி­னார்.

இவ்­வாண்டு இது­வரை வேலை­யிட விபத்­து­களில் 26 பேர் உயிர்­ இழந்­து­விட்­ட­னர். 2016க்குப் பிறகு இதே கால­கட்­டத்­தில் உயி­ரி­ழந்­தோர் எண்­ணிக்கை இதுவே ஆக அதி­கம்.

இதைத் தொடர்ந்து, வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தா­ரத்தை மறு­ஆய்வு செய்­வ­தற்கு நேரத்தை ஒதுக்க முத­லா­ளி­க­ளுக்கு நினை­வூட்­டப்­பட்­டது.

இவ்­வாண்­டின் முதல் நான்கு மாதங்­களில் 200க்கும் அதி­க­மான வேலை­யிட விபத்­து­கள் ஏற்­பட்­ட­தாக மனி­த­வள அமைச்சு கூறி­யது.

வேலை­யிட விபத்­து­களில் உயி­ரி­ழந்­தோர், கடு­மை­யாக காய­முற்­றோ­ரில் 65 விழுக்­காட்­டி­னர் சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­களில் பணி­யாற்­றி­ய­தா­க­வும் அமைச்சு சொன்­னது.

திரு ஸாக்­கி­யும் மனி­த­வள அமைச்­சை சேர்ந்த அதி­கா­ரி­கள் சில­ரும் கோ செங் லாய் நிறு­வனத்தில் நேற்று சோ­தனை மேற்­கொண்­ட­னர்.

அந்­நி­று­வ­னத்­தின் பல்­வேறு செயல்­பா­டு­க­ளை­யும் நடப்­பில் உள்ள பாது­காப்பு அம்­சங்­க­ளை­யும் அவர்­கள் பார்­வை­யிட்­ட­னர்.

பளு­தூக்­கியை (forklift) இயக்­கி­ய­வர் ஒரு­வர் உரி­மம் பெறா­தது, அந்­நி­று­வ­னத்­தின் இரண்­டாம் தளத்­தில் போது­மான தடுப்­பு­வே­லி­கள் இல்­லா­தது உள்­ளிட்ட பாது­காப்பு விதி­மீ­றல்­கள் கண்­ட­றி­யப்­பட்­டன. இத­னால், அந்­நி­று­வ­னத்­துக்கு வேலை நிறுத்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­படும்.