கவனக்குறைவுடன் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய மருத்துவருக்கு ஒரு வாரச் சிறை

கவனக்குறைவுடன் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய மருத்துவருக்கு ஒரு வாரச் சிறை

2 mins read
c358fe0b-7900-4531-ac45-7199fde7763c
-

2019 அக்­டோ­பர் 8ஆம் தேதி, சாலை­யில் கார் ஓட்­டிய மருத்­து­வர் ஒரு­வர், எதிரே வாக­னங்­கள் வரு­கின்­ற­னவா என்­ப­தைக் கவனிக்கத் தவ­றி­னார். இத­னால், போக்­கு­வரத்துச் சந்­திப்­பில் மற்­ற வாக­னங்­க­ளுக்கு வழி­விட இவர் தவ­றி­னார்.

எர்­னஸ்ட் ஃபூ வெய்­ஸோங், 39, எனும் அந்த மருத்­து­வர், காரை வலது பக்­கம் திருப்­பு­வ­தற்கு முன்பு வெள்ளை கோட்­டில் நிறுத்­த­வும் இல்லை. இதன் விளை­வாக, அவ­ரது காரும் திரு சூன் ஜின் ஜோக் என்­ப­வர் ஓட்­டிய காரும் ஒன்­றோடு ஒன்று மோதிக்­கொண்­டன. காரை நிறுத்­து­வ­தற்கு முன், மணிக்கு 76 கிலோ­மீட்­டர் வேகத்­தில் திரு சூன் காரை ஓட்­டி­னார். ஆனால், அந்­தச் சாலை­யின் வேக வரம்பு மணிக்கு 60 கிலோ­மீட்­டர்.

அந்த காரின் பின் இருக்­கை­யில் அமர்ந்­தி­ருந்த திரு சூனின் தாயா­ரான திரு­வாட்டி ஹெங் ஃபோங் போய், 96, என்­ப­வ­ருக்கு கடு­மை­யான காயங்­கள் ஏற்­பட்­டன. காரில் இருந்­த­போது அவர் இருக்கை வாரை அணி­ய­வில்லை. விபத்து ஏற்­பட்டு நான்கு நாள்­கள் கழித்து அவர் மர­ண­ம­டைந்­தார்.

ஃபூவுக்கு நேற்று ஒரு வாரச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. கவ­னக்­கு­றை­வாக காரை ஓட்டி கடு­மை­யா­ன காயம் விளை­வித்த குற்­றச்­சாட்டை அவர் ஒப்புக்­கொண்­டார்.

அனைத்து வகை வாக­னம் ஓட்­டும் உரி­மையை வைத்­தி­ருக்­கவோ வாக­னங்­களை ஓட்­டவோ அவ­ருக்கு ஈராண்­டு­கால தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

வேக வரம்பை மீறி காரை ஓட்டி­ய­தற்­காக திரு சூனுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டதா என்­பது குறித்து நீதி­மன்ற ஆவ­ணங்­களில் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

சிங்­கப்­பூ­ரில் பதி­வு­செய்­யப்­பட்ட சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு நிபு­ணர்­களைப் பற்றி இணை­யத்­தில் தேடு­கை­யில், டான் டோக் செங் மருத்து­வ­ம­னை­யின் காது, மூக்கு, தொண்டைப் பிரிவைச் சேர்ந்தவர் டாக்டர் ஃபூ எனத் தெரி­ய­வந்­தது.

அவர் மருத்துவ ஆலோசகராக பத­வி­ வகிப்பப­தாக மருத்­து­வ­மனை­யின் இணை­யப் பக்­கத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.