சிங்கப்பூருக்குக் கோழி ஏற்றுமதி செய்யும் தடையை மலேசியா சற்று தளர்த்தியுள்ளது
கம்போங் எனப்படும் நாட்டுக் கோழியையும், கருப்பு கோழியையும் மலேசியா சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யும்.
உயிர் கம்போங் கோழிகள் இன்றிலிருந்தும், உயிர் கருப்புக் கோழிகள் ஜூன் 18லிருந்தும் ஏற்றுமதி செய்யப்படும்.
இது குறித்து மலேசிய அரசாங்கம் ஜூன் 8ஆம் தேதி அன்று முடிவெடுத்தைத் தொடர்ந்து ஏற்றுமதி தடை சற்று தளர்த்தப்பட்டுள்ளது.
இந்த முடிவை வரவேற்ற சிங்கப்பூர் கோழி விநியோக நிறுவனங்கள் கூடியவிரைவில் தடை முழுமையாகத் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கின்றன.
சிங்கப்பூரில் பெரும்பாலும் உண்ணப்படும் இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகளுக்கு (பிராய்லர்) தடை தொடர்ந்து நீடிக்கிறது.
மலேசியாவில் கோழிகளின் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சிங்கப்பூருக்கு கோழிகளை ஏற்றுமதி செய்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்தது.