'புதிய வளர்ச்சி வாய்ப்புகளுக்கு கொவிட்-19 வழிவிட்டுள்ளது'

'புதிய வளர்ச்சி வாய்ப்புகளுக்கு கொவிட்-19 வழிவிட்டுள்ளது'

2 mins read
8eaef3ea-2ffa-4ae4-bd21-ca0f76204acf
-

கொவிட்-19 கொள்­ளை­நோ­யால் கடந்த ஈராண்­டு­க­ளாக சவால்­களும் தடை­களும் அடுத்­த­டுத்து ஏற்­பட்டு வந்­தன. அந்­தச் சூழ­லி­லும் புதிய அம்­சங்­களில் வளர்ச்சி காணும் வாய்ப்பை கொவிட்-19 உல­கெங்­கும் உள்ள நிறு­வ­னங்­களுக்கு வழங்­கி­யுள்­ளது.

சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்­கான மின்­னி­லக்க உரு­மாற்­றம் தொடர்­பில் வர்த்­த­கத் தலை­வர்­களுக்­கி­டையே நடந்த குழுக் கலந்­து­ரை­யா­டல் ஒன்­றில் இவ்­வாறு கூறப்­பட்­டது.

ஹில்­டன் சிங்­கப்­பூர் ஆர்ச்­சர்ட் ஹோட்­ட­லில் நடை­பெற்று வரும் இந்­தோ­னீ­சியா-சிங்­கப்­பூர் வர்த்­தக மாநாட்­டின் ஒரு பகு­தி­யாக இந்­தக் கலந்­து­ரை­யா­டல் அங்­கம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரின் இந்­தோ­னீ­சியத் தூத­ர­க­மும் இந்­தோ­னீ­சிய வர்த்­தக, தொழில் சபை­யும் இணைந்து ஏற்­பாடு செய்­தி­ருந்த இந்த நிகழ்­வில் 300க்கும் மேற்­பட்­டோர் கலந்­து­கொண்டு சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு, மின்­னி­லக்க உரு­மாற்­றம், நீடித்த நிலைத்­தன்மை ஆகிய தலைப்­பு­கள் தொடர்­பில் பேசி­னர்.

இணைய வர்த்­த­கம் மீது கொரோனா கிரு­மிப் பர­வல் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது. அத்­து­டன் சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் தொழில்­நுட்­பத்­தைப் பயன்­படுத்தி எட்டா தொலை­வில் உள்ள பய­னீட்­டா­ளர்­க­ளை­யும் சென்­ற­டை­வதைக் கிரு­மித்­தொற்று சூழல் ஊக்­கு­வித்­தது என்­றார்

'சீ குருப்' நிறு­வ­னத்­தின் குழு­மத் தலைமை செயல்­பாட்டு அதி­காரி திரு காங் யெ.

கொள்­ளை­நோ­யால் வர்த்­தக ரீதி­யாக எழும் தேவை­கள், மந்த நிலைக்­குத் தள்­ளப்­பட்­ட­போது நிறு­வ­னங்­கள் புதிய தொழில்­நுட்­பத் தீர்­வு­களை நாடு­வ­தன் முக்­கியத்­து­வத்­தைப் பற்­றி­யும் கலந்­துரை­யா­ட­லில் குறிப்­பி­டப்­பட்­டது.

இதற்­கி­டையே, தெமா­செக் நிறு­வ­ன­மும் கூகல் நிறு­வ­ன­மும் இணைந்து மேற்­கொண்ட ஓர் அண்­மைய ஆய்வு குறித்து தெமா­செக்­கின் தென்­கி­ழக்­கா­சி­யப் பிரி­வுத் துணைத் தலை­வர் திரு ஃபோக் வாய் ஹோங் பகிர்ந்­து­கொண்­டார்.

தொழில்­நுட்ப வளர்ச்­சிக்­குத் தொடர்ந்து பெரும் முட்­டுக்­கட்­டை­யாக இருப்­பது, திறன் என்று ஆய்­வில் கண்­ட­றி­யப்­பட்­டது.

இணை­யப் பொரு­ளி­ய­லில் அங்­கம் வகிப்­ப­தற்­குத் தயா­ரா­கும் நிலை­யில் சிங்­கப்­பூ­ரின் தொழி­லா­ளர் பிரி­வி­னர் திறன் மேம்­பாட்­டி­லும் புதுத் திறன் பயிற்­சி­யி­லும் கவ­னம் செலுத்த வேண்­டும் என்று திரு ஃபோக் வலி­யு­றுத்­தி­னார்.