புருணை ஆயுதப் படைத் தலைவருக்கு உயரிய விருது

புருணை ஆயுதப் படைத் தலைவருக்கு உயரிய விருது

1 mins read
df98d51e-8f70-4bc7-866b-52d0e2c1100d
தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்னிடமிருந்து (இடம்) ராணுவத்துக்கான மெச்சத்தக்க சேவை பதக்கத்தை மேஜர் ஜெனரல் பலவான் ஹாஜி முஹம்மது ஹசாய்மி பொல் ஹசான் நேற்று பெற்றுக்கொண்டார். படம்: தற்காப்பு அமைச்சு -

புருணை ஆயு­தப் படைத் தலை­வ­ரான மேஜர் ஜென­ரல் பல­வான் ஹாஜி முஹம்­மது ஹசாய்மி பொல் ஹசா­னுக்கு ராணு­வத்­துக்­கான மெச்­சத்­தக்க சேவை பதக்­கத்தை அதி­பர் ஹலிமா யாக்­கோப் வழங்­கிச் சிறப்­பித்­துள்­ளார்.

புருணை ஆயு­தப் படைத் தலை­வ­ராக 2020ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை அவர் பங்­க­ளித்­தது, சிங்­கப்­பூர் ராணு­வத்­திற்­கும் புருணை ஆயு­தப் படைக்­கும் இடையே உள்ள வலு­வான உற­வுக்­குப் பங்­காற்­றி­யது ஆகி­ய­வற்றை அங்­கீ­க­ரிக்­கும் வகை­யில் இந்த உய­ரிய விருது அவ­ருக்கு அளிக்­கப்­பட்­டுள்­ளது.

கொம்­பாக் டிரை­வில் அமைந்­துள்ள தற்­காப்பு அமைச்­சின் கட்­ட­டத்­தில் தற்­காப்பு அமைச்­சர் இங் எங் ஹென்­னி­ட­மி­ருந்து விருதை மேஜர் ஜென­ரல் ஹசாய்மி நேற்று பிற்­ப­கல் பெற்­றுக்­கொண்­டார்.

மேஜர் ஜென­ரல் ஹசாய்மி தலை­மை­யில் புருணை ஆயு­தப்­ப­டை­யும் சிங்­கப்­பூர் ராணு­வ­மும் நிபு­ணத்­துவப் பரி­மாற்­றத் திட்­டங்­க­ளின் மூலம் தங்­க­ளின் இரு­த­ரப்பு உறவை வலு­வாக்­கிக்­கொண்­டுள்­ள­தாக தற்­காப்பு அமைச்சு குறிப்­பிட்­டது.

இரு நாடு­க­ளின் நீண்­ட­கால நட்­பும் அவற்­றுக்­கி­டையே நில­வும் ஒத்­து­ழைப்­பும் தொடர்ந்து வலு­வா­ன­தாக இருக்­கும் என்று தாம் நம்­பு­வ­தாக மேஜர் ஜென­ரல் ஹசாய்மி தெரி­வித்­த­து­டன் தமக்கு உய­ரிய விருது வழங்­கப்­பட்­ட­தில் பெரு­மிதம் கொள்­வ­தா­க­வும் கூறி­னார்.