உணவுப் பாதுகாப்பு இவ்வாண்டு 'ஜி-20' நாடுகளுக்கு முக்கியமானதாக, முன்னுரிமை பெறக்கூடிய ஓர் அம்சமாக இருக்கும் என்று இந்தோனீசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மார்சுடி கூறியுள்ளார்.
இந்தோனீசியா-சிங்கப்பூர் வர்த்தக மாநாட்டில் பேசிய அவர், கொவிட்-19 தாக்கத்தாலும் உக்ரேனில் தொடரும் போராலும் உணவுப் பற்றாக்குறை மேலும் மோசமாகலாம் என்றார்.
உணவுப் பாதுகாப்பின்மை நிலையை இவ்வாண்டு உலகின் சுமார் 323 மில்லியன் பேர் எதிர்நோக்கலாம் என்று ஆய்வு ஒன்றை மேற்கோள் காட்டினார் அமைச்சர். கொவிட்-19, உக்ரேன் போர் இரண்டுக்கும் முந்திய நிலையை ஒப்பிடுகையில் இது இரு மடங்காகும்.