தமது வீட்டில் அதிகாலை 5 மணியளவில் தீ மூண்டதை அடுத்து அங் மோ கியோ குடியிருப்பாளர் ஒருவர் அரக்கப்பரக்க வீட்டை விட்டு வெளியேறினார். நேற்றுக் காலை நடந்த இச்சம்பவத்தில் வீட்டின் வரவேற்புக் கூடமும் படுக்கை அறையும் தீக்கு இரையாகின.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் வருவதற்குள் வீட்டிலிருந்து வெளியேறிவிட்ட அந்தக் குடியிருப்பாளர், சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரின் அண்டைவீட்டுக்காரர் மயங்கி விழுந்ததை அடுத்து அவர் டான் டோக் சேங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
முன்னெச்சரிக்கையாக கட்டடத்திலிருந்து சுமார் 50 பேர் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே, தீ மூண்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடந்து வருவதாகக் கூறப்பட்டது.
படம்: ஸ்டோம்ப்