இளம் பெண்ணல்ல, 51 வயது மாது; ஏமாந்த ஆடவர்

இளம் பெண்ணல்ல, 51 வயது மாது; ஏமாந்த ஆடவர்

1 mins read
9ca05533-c3f1-4215-9170-b734295d9931
-

திரு­மண ஜோடி­க­ளைச் சேர்த்­து­வைக்­கும் இணை­யப்­பக்­கத்­தில் தம்மை ஓர் இளம் பெண்­ணா­கக் காட்­டிக்­கொண்டு ஆட­வர் ஒரு­வரை நம்­ப­வைத்து பணம் பறித்த 51 வயது மாதுக்கு ஏழு மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

இதற்கு முன்பு திரு­மண ஆசை காட்டி பல ஆண்­களை 51 வயது மல்­லிகா ராமு ஏமாற்­றி­ தண்டனை அனுபவித்துள்ளார்.

இம்­முறை தமது உற­வி­ன­ரின் புகைப்­ப­டத்­தைப் பயன்­ப­டுத்தி தம்மை 25 வயது பெண்­ணாக மல்­லிகா காட்­டிக்­கொண்­டார்.

திரு­மண ஜோடி இணை­யப்­பக்­கத்­தில் அந்­தப் படத்­தைப் பார்த்து மல்­லிகா விரித்த வலை­யில் 29 வயது இந்­திய நாட்­ட­வர் வச­மாக மாட்­டிக்­கொண்­டார்.

அவ­ரைத் திரு­ம­ணம் செய்­து­கொள்­வ­தா­கப் பொய் கூறி அந்த ஆட­வ­ரி­ட­மி­ருந்தும் அவ­ரது தந்­தை­யி­ட­மி­ருந்தும் மல்­லிகா $5,750 பறித்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரில் வசிக்­கும்

மல்­லிகா இக்­குற்­றத்­தைப் புரிந்­த­போது சொந்தத் தொழில் செய்­து ­கொண்­டி­ருந்­த­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

தாம் ஆஸ்­தி­ரே­லி­யா­வில் இருப்­ப­தா­க­வும் சிங்­கப்­பூர்

திரும்­பி­ய­தும் திரு­ம­ணம் செய்­து­கொள்­ள­லாம் என்­றும் மல்­லிகா அந்த ஆட­வ­ரி­டம் தெரி­வித்­தார்.

பணம் தேவைப்­ப­டு­வ­தா­கக் கூறி பணம் பெற்­றுக்­கொண்ட மல்­லிகா பிறகு சிங்­கப்­பூ­ரில் உள்ள தானி­யங்கி வங்கி இயந்­தி­ரம் மூலம் $2,000 திருப்பி அனுப்­பி­ய­போது அந்த ஆட­வ­ருக்­குச் சந்­தே­கம் ஏற்­பட்­டது.

இதை­ய­டுத்து அவர் பல இடங்­களில் விசா­ரித்த பிறகு உண்மை வெளிச்­சத்­துக்கு வந்­தது.