ஆண் கொசுக்கள் மட்டும் விடுவிப்பு

ஆண் கொசுக்கள் மட்டும் விடுவிப்பு

2 mins read
6c5735a8-367d-48f0-84e0-3b629ffb224c
வோல்பாகியா திட்டத்தின் கீழ் ஆண் கொசுக்களை தேசிய சுற்றுப்புற அமைப்பின் அதிகாரி ஒருவர் விடுவிக்கிறார். கோப்புப் படம்: தேசிய சுற்றுப்புற அமைப்பு -

டெங்கிக் காய்ச்சலைத் தடுப்பதில் சிங்கப்பூரின் அணுகுமுறை

கொசுக்­களை கொசுக்­க­ளால் ஒழிக்­கும் முயற்­சி­யில் தனிச்­சி­றப்பு வாய்ந்த அணு­கு­மு­றையை சிங்­கப்­பூர் பின்­பற்­று­கிறது. அதா­வது வோல்­பா­கியா எனும் நுண்­ணு­யி­ரால் பாதிக்­கப்­பட்ட ஆண் ஏடிஸ் கொசுக்­களை மட்­டுமே உற்­பத்தி செய்து குறிப்­பிட்ட இடங்­களில் சிங்­கப்­பூர் விடு­விக்­கிறது.

வோல்­பா­கி­யா­வால் பாதிக்­கப்­ ப­டாத பெண் கொசுக்­கள், வோல்­பா­கி­யா­வால் பாதிக்­கப்­பட்ட ஆண் கொசுக்­க­ளு­டன் சேர்ந்து இனப்­பெ­ருக்­கத்­தில் ஈடு­ப­டும்­போது முட்டை உற்­பத்­தி­யா­னா­லும் அவை பொரிக்­காது. இத­னால் ஏடிஸ் கொசுக்­க­ளின் எண்­ணிக்கை குறை­கிறது.

இத்­த­கைய ஒடுக்­கு­மு­றையை அமெ­ரிக்கா, சீனா, தாய்­லாந்து உட்­பட ஐந்து நாடு­கள் பின்­பற்­று­கின்­றன.

இதற்கு மாறாக, பத்­துக்­கும் மேற்­பட்ட நாடு­கள் மாற்று உத்­தி­யைப் பயன்­ப­டுத்­து­கின்­றன. இதில் வோல்­பா­கியா தொற்றிய ஆண் மற்­றும் பெண் கொசுக்­கள் பர­வ­லாக விடு­விக்­கப்­ப­டு­வ­தால் அனைத்­துமே வோல்­பா­கிய தாங்­கிய கொசுக்­க­ளாக மாறு­கின்­றன.

டெங்கி, ஸிக்கா, சிக்­குன்­ குனியா, மஞ்­சள் காய்ச்­சல் போன்ற கிரு­மி­க­ளின் இனப்­பெ­ருக்­கத்தை வோல்­பா­கியா தடுக்­கிறது.

நோய் ஏற்­ப­டுத்­தும் மோச­மான கொசுக்­களை மாற்றி வோல்­பா­கியா தாங்­கிய கொசுக்­களை இனப்­பெ­ருக்­கம் செய்­வதே மாற்று உத்­தி­யின் நோக்­க­மா­கும். இதன் மூலம் டெங்கி போன்ற கொசுக்­க­ளால் பர­வும் நோய்­கள் கட்­டுப்­ப­டுத்­தப் ­ப­டு­கின்­றன.

இந்த மாற்று உத்­தியை மலே­சியா, இந்­தோ­னீ­சியா, ஆஸ்­தி­ரே­லியா, வியட்­னாம், இலங்கை போன்ற நாடு­கள் பயன்­ப­டுத்­து­கின்­றன.

தேசிய சுற்­றுப்­புற அமைப்­பின் சுற்­றுப்புற சுகா­தாரக் கழ­கத்­தின் குழும இயக்­கு­ந­ரான பேரா­சி­ரி­யர் இங் லீ சிங், இரண்டு முறை­களும் டெங்­கி­யைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தில் பலன் அளித்துள்ளதாக தெரி­வித்­துள்­ளார்.

சிங்­கப்­பூ­ரின் ஆர்ச்­சர்ட் ஹோட்­ட­லில் இம்­மா­தம் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடை­பெ­றும் டெங்­கித் தடுப்பு மாநாட்­டில் நேற்று பேசிய திரு இங், சிங்­கப்­பூர் ஏன் கொசு ஒடுக்­கு­மு­றையைப் பின்­ பற்றுகிறது என்­ப­தற்கு ஐந்து கார­ணங்­க­ளைத் தெரி­வித்­தார்.

முத­லா­வ­தாக, கொசுக்­க­ளின் எண்­ணிக்­கை­யைக் கட்­டுப்­ப­டுத்­து ­வ­தால் டெங்கி பர­வும் அபா­யம் குறை­கிறது என்­றார்.

"சிங்­கப்­பூ­ரில் கொசுக்­க­ளின் எண்­ணிக்கை குறை­வாக உள்­ளது. மாற்று உத்­தி­யில் அதிக கொசுக்­களை இனப்­பெ­ருக்­கம் செய்ய வேண்­டி­யி­ருக்­கும். பெரு­ம­ள­வில் கொசுக்­கள் இனப்­பெ­ருக்­கம் செய்­யப்­ப­டு­வ­தால் டெங்­கி­யைப் பரப்­பும் கொசுக்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வது இய­லா­மல் போக­லாம்," என்று பேரா­சி­ரி­யர் இங் கூறி­னார்.

இரண்­டா­வது, மாற்று உத்­தி­யில் வோல்­பா­கி­யா­வின் தடுக்­கும் ஆற்­ற­லை­யும் மீறி கிருமி உரு­மாறி பர­வும் அபா­யம் இருப்­ப­தாக அவர் எச்­ச­ரித்­தார்.

3வது கார­ணம், ஒடுக்­கு­மு­றை­யில் கடிக்­காத ஆண் கொசுக்­கள் மட்­டும் விடு­விக்­கப்­ப­டு­வ­தால் மக்­க­ளுக்குப் பாதிப்பு இல்லை.

4வது, சிங்­கப்­பூ­ரின் கொள்­கைக்­கும் மற்­றும் கடந்த அறு­பது ஆண்டு ­க­ளாக வலி­யு­றுத்­தப்­பட்டு வந்த கொசு உற்­பத்­தி­யா­கும் இடங்­களை அடை­யா­ளம் கண்­டு­பி­டித்து குறைக்­கும் பொதுச்­சு­கா­தார தக­வ­லு­டன் கொசு ஒடுக்­கு­முறை ஒத்­துப்­போ­கிறது. 5வது கார­ண­மாக, கொசு ஒடுக்­கு­மு­றையைப் பின்­பற்­றிய பிறகு மாற்று உத்­திக்கு மாறு­வது எளிது. ஆனால் மாற்று உத்­தியை செயல்­ ப­டுத்­திய பிறகு ஒடுக்­கு ­மு­றைக்கு மாறு­வது சிர­மம்.

எது எப்­ப­டி­யி­ருந்­தா­லும் இது­வரை வோல்­பா­கியா திட்­டம் சிங்­கப்­பூ­ரில் வெற்­றி­க­ர­மாக இருந்­துள்­ளது என்று உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் தக­வல், கிருமி ஆய்­வுக்­கான கூட்டு நிலை­யத்­தின் இயக்கு ­ந­ரு­மான பேரா­சி­ரி­யர் இங் கூறினார்.