சுவரை இடிக்கும் பணியில் விபரீதம்; ஊழியர் மரணம்

சுவரை இடிக்கும் பணியில் விபரீதம்; ஊழியர் மரணம்

1 mins read
c96582c4-c8c5-4f18-a392-d9571273011b
-

தனி­யார் தரை­வீடு ஒன்­றின் சுவரை இடிக்­கும் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்­த­போது அதன் ஒரு பகுதி தம் மீது இடிந்து விழுந்­த­தில் 41 வயது பங்­ளா­தேஷ் ஊழி­யர் ஒரு­வர் உயி­ரி­ழந்­தார்.

சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்புப் படை­யைச் சேர்ந்த மீட்­புப் பணி­யா­ளர்­கள், அந்த ஊழி­யரை இடி­பாடு­களில் இருந்து விடு­வித்­த­னர். ஆனால், சம்­பவ இடத்­தி­லேயே அவர் இறந்­து­விட்­ட­தாக அவர்­கள் கூறி­னர்.

ஜூன் 10ஆம் தேதி மாலை 4.30 மணி­ய­ள­வில், எண் 44 தை ஹுவான் ஹைட்ஸ் எனும் முக­வரி­யில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து தனக்­குத் தக­வல் அளிக்­கப்­பட்­ட­தாக மனி­த­வள அமைச்சு கூறி­யது.

இந்­தச் சம்­ப­வம் குறித்து விசா­ரணை நடத்­தி­வ­ரும் அமைச்சு, அங்கு வேலை நிறுத்த உத்­த­ர­வைப் பிறப்­பித்­துள்­ளது.

ஆண்­டின் இந்­தக் கட்­டத்­தில் வேலை­யிட விபத்­து­கள் அதி­கரிப்­பதாக வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தார மன்­றம் வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளது. வேலை­யிட விபத்­து­க­ளுக்கு எதி­ராக கவ­னத்­து­டன் இருக்­கு­மாறு கட்டுமானத் துறைக்கு அது அறி­வு­றுத்­தி­யது.

சுவரை இடிக்­கும் பணி­கள் அதிக இடர் உடைய நட­வ­டிக்­கை­கள் என்­ப­தைச் சுட்­டிய மன்றம், பணி­யைத் தொடங்­கு­வ­தற்கு முன்பு முறை­யான திட்­டங்­களும் நடை­முறை­களும் நடப்­பில் இருக்க வேண்­டும் என்­பதை வலி­யு­றுத்­தி­யது.

இவ்­வாண்டு வேலை­யிட விபத்து­களில் இது­வரை 26 பேர் உயிர் ­இழந்­து­விட்­ட­னர்.