ஃபின்லாந்தை உதாரணமாகக் காட்டி கல்வியாளர்கள் விவாதம்
ஃபின்லாந்தில் நீக்குப்போக்கான வாழ்நாள் கற்றல் வாய்ப்புகளை ஒரே கூரையின்கீழ் கொண்டுவர அங்குள்ள 38 உயர் கல்வி நிறு
வனங்கள் கைகோத்துள்ளன.
கிட்டத்தட்ட அந்நாட்டின் மக்கள்தொகையைக் கொண்ட, நிலப்
பரப்பில் சிறிய சிங்கப்பூரும் வாழ்நாள் கற்றல் ஆர்வலர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய அதேபோன்றதொரு ஏற்பாட்டைச் செய்யும் நிலையில் உள்ளது. கல்வி அமைச்சர் சான் சுன் சிங் இதனை நேற்று ஒரு நிகழ்வில் தெரிவித்தார்.
"பள்ளிப் பருவத்தின் முதல் 15 ஆண்டுகளுக்குத் தேவையானவற்றை சிங்கப்பூர் அதிகமாகவே முதலீடு செய்து இருக்கிறது. ஆயினும், கற்றலின் அடுத்த 50 ஆண்டுகள் மீது கவனம் செத்தும் வகையில் புதிய கண்ணோட்டத்துடன் கூடிய அம்சங்களைக் கவனிக்க வேண்டிய தேவை உள்ளது," என்றார் அவர்.
மேலும், "கற்பதற்கும் வேலைக்கும் இடையிலுள்ள செயற்கைத் திரையை அகற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக, புதிய 'வேலை-கற்றல் சமநிலை'யை நாம் உருவாக்க வேண்டி உள்ளது.
"பெரியோர்களின் கற்றலுக்கு உதவும் வகையில் கல்வி நிலையங்களுக்கு இடையில் சிறந்த, மிகவும் பொருத்தமான கற்றல் முறையை எவ்வாறு நிர்வகிக்கலாம் என்பதற்கான ஆலோசனை நடைபெற்று வருகின்றன," என்று திரு சான் கூறினார்.
இங்குள்ள ஆறு தன்னாட்சி பல்கலைக்கழகங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு நிபுணத்துவத்தையும் வலிமையையும் கொண்டிருப்பதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தலைவர் டான் எங் சை தெரிவித்துள்ளார்.
'சிஇடி' எனப்படும் தொடர் கல்வி மற்றும் பயிற்சியில் ஈடுபடுவோரை இலக்காகக் கொண்ட கல்வித் திட்டங்களை வகுத்து நிர்வகிக்க இத்தகைய நிபுணத்துவமும் வலிமையும் கைகொடுக்கும் என்றார் அவர்.
அதேநேரம், "நமது எல்லா வகையான சிந்தனைகளையும் ஒருசேர அறிமுகம் செய்யும் தளமாக சிஇடி இருக்காது என்பது எனது கருத்து," என்று சிங்கப்பூர் நிர்வாகப் பல்
கலைக்கழகத்தின் தலைவரான லில்லி கோங் கூறினார்.
12வது அனைத்துலகக் கல்வியாளர் ஆலோசனைக் குழு விவாதத்தின்போது இவ்வாறு வெவ்வேறு வகையான கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. ரிட்ஸ் கார்ல்டன் மில்லெனியா சிங்கப்பூர் ஹோட்டலில் கடந்த புதன்கிழமை தொடங்கிய குழு விவாத நிகழ்வு நேற்று நிறை
வடைந்தது.
கல்வி அமைச்சால் ஏற்படுத்தப்பட்ட இந்தக் குழு ஈராண்டு முதல் மூன்றாண்டு வரையிலான இடைவெளியில் சந்தித்து கல்வி முறையை ஆராயும். தற்போதைய குழுவில் ஜப்பான், சீனா, இஸ்ரேல், ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளைப் பிரதிநிதிக்கும் பலதரப்பட்ட 15 கல்வியாளர்களும் தொழில்துறைத் தலைவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
ஃபின்லாந்து கற்றல் ஏற்பாடு
களைப் பற்றிய சில விவரங்களும் இந்த மூன்று நாள் விவாதத்தின்போது வெளியிடப்பட்டன.
'டிஜிவிசியோ 2030' என்னும் தலைப்பில் ஃபின்லாந்தின் கல்வித் திட்டம் நடைபெற்று வருகிறது. பெருந்திரளான தரவுகள், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் உதவி யுடன் மாணவர்களுக்கான தனிப்பட்ட வழிகாட்டுதல்களையும் இது உள்ளடக்கி உள்ளது.
மாணவரின் பின்னணி, அவரது முந்திய கல்விநிலை, வேலை அனுபவம், வேலைச் சந்தை நிலவரம் ஆகியன இந்தக் கற்றலின்போது ஆராயப்படுவதாக ஃபின்லாந்தில் உள்ள ஆல்டோ பல்கலைக்கழகத்தின் தலைவர் பேராசிரியர் இல்க்கா நீமெலா கூறினார்.

