இந்தியா சென்றிருக்கும் வெளியுறவு அமைச்சர் விவியன் பால
கிருஷ்ணன் புதுடெல்லியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியின் அமைச்சர்நிலை அரங்கில் பங்கேற்று உரையாற்றினார்.
இந்தியாவும் ஆசியானும் நீண்ட, வரலாற்றுபூர்வ உறவுகளைக் கொண்டுள்ளன.
பொருளியல் ஒருங்கிணைப்பை பெரிய அளவில் வளர்த்தல், அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கும் அதற்கு மேலும் நீடித்து நிலைக்கக்கூடிய வளர்ச்சிக்கான மின்னிலக்கப் புரட்சியைப் பயன்படுத்திக்கொள்ளுதல் ஆகியவற்றின் அவசியம் குறித்து டாக்டர் விவியன் தமது உரையில் குறிப்பிட்டார்.
முன்னதாக, இந்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் புரியையும் அஷ்வினி வைஷ்ணவையும் அவர் சந்தித்துப் பேசினார். சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை டாக்டர் விவியனுடன் அவ்விரு அமைச்சர்களும் மறு
உறுதிப்படுத்தினர். பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா அளித்த தேநீர் விருந்தில் டாக்டர் விவியனுடன் இந்தியாவின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு கூறியது.

