போதைப் பொருள் குற்­றத்­துக்­காக 146 பேர் கைது

போதைப் பொருள் குற்­றத்­துக்­காக 146 பேர் கைது

1 mins read
7f90dc22-5ea3-4022-a034-8865bcc09dfd
-

மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு (சிஎன்பி) இரண்டு வாரங்­க­ளாக மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­களில் 146 பேர் போதைப் பொருள் குற்­றங்­க­ளுக்­கா­கக் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

மேலும், $55,000 சந்தை மதிப்­புள்ள போதைப் பொருள்­கள் கைப்­பற்­றப்­பட்­ட­தாக மத்­திய போதைப் பொருள் ஒழிப்­புப் பிரிவு கூறி­யது.

ஜூன் 6ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை அதி­கா­ரி­கள் பல்­வேறு இடங்­களில் சோதனை களை நடத்­தி­னர். ஜூரோங், செங்­காங், மரின் பரேட், ஈசூன் உள்­ளிட்ட இடங்­க­ளி­லி­ருந்து போதைப் பொருள்­கள் கைப்பற்றப்பட்டுள்ள­ன.

கஞ்சா உள்­ளிட்ட சட்­ட­வி­ரோத போதைப் பொருள்­கள் ஆபத்­தா­னவை என்­றும் போதைப் புழக்­கத்தை ஏற்­ப­டுத்­து­பவை என்­றும் மத்­திய போதைப் பொருள் ஒழிப்­புப் பிரிவு குறிப்­பிட்­டது.

அவை பல­ரது வாழ்க்­கையை, குடும்­பங்­களை, சமூ­கங்­களை அழிக்க வல்­லது என்­றும் சிஎன்பி கூறி­யது.

போதைப்­பொ­ருள் ஒழிப்­புச் சட்­டத்­தின்­கீழ், கஞ்சா 'ஏ' வகைக் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட போதைப் பொருளாகும் என்றும் சிஎன்பி பொதுமக்­க­ளுக்கு நினை­வு­ப­டுத்தி­யது.