கடந்த வாரம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுமார் 20,000 பயணிகளின் ஈஸி-லிங்க் அட்டை களிலிருந்து பணம் கழிக்கப்பட்டது என்று ஈஸி-லிங்க் நிறுவனம் கூறியுள்ளது.
தான் பயன்படுத்தும் கட்டணக் கட்டமைப்பில் ஜூன் 7ஆம் தேதி தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளின் கேள்விகளுக்கு பதில் அளித்தபோது அது கூறியது.
கடந்த 9ஆம் தேதிக்குள் பாதிக்கப்பட்ட 99 விழுக்காட்டுப் பயணி களின் அட்டைகளில் கழிக்கப்பட்ட தொகையை நிரப்பிவிட்டதாக நிறுவனம் நேற்று கூறியது.
பாதிக்கப்பட்ட பயணிகளில் ஒரு விழுக்காட்டினர்தான் அந்த 20,000 பேர். அவர்களில் சிலர் அந்தத் தவறு பற்றி ஈஸி-லிங்க் நிறுவனத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் புகார் அளித்தனர். அச்சம்பவம் பற்றி ஜூன் 9ஆம் தேதி ஃபேஸ்புக்கில் மன்னிப்புக் கேட்ட நிறுவனம், 10ஆம் தேதிக்குள் பணத்தைச் நிரப்பிவிடுவதாகக் கூறி இருந்தது.