துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான திரு லாரன்ஸ் வோங், தங்கள் காலகட்டத்தின் மிகப் பெரிய சவால்களைச் சமாளிக்க அதிகமான இளைய சிங்கப்பூரர்கள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
பரிவும் புத்தாக்கமும் மிக்க தீர்வுகளை உருவாக்குவதற்கு, மாறுபடும் கருத்துகளிலிருந்து கருத்து ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் ஆற்றல் முக்கியம் என்று துணைப் பிரதமர் கூறினார்.
"நோக்கமிக்க வாழ்க்கையை அரவணைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பெரிதாகக் கருதும் பிரச்சினைகளைத் தீர்க்க உங்கள் பேரார்வத்தையும் லட்சியவாதத் தையும் பயன்படுத்துங்கள். நீங்கள் துடிப்புமிக்க குடிமக்களாகவும் மாற்றங்களை உருவாக்குவோராகவும் இருப்பது சிங்கப்பூருக்கு அவசியம்," என்றார் திரு வோங்.
தொண்டூழியம் புரிவதன்வழியும் உள்ளூர் சமூகத்துக்குத் தொண்டாற்றுவதன் வழியும் இளையர்கள் அப்பணியைத் தொடங்கலாம் என்று திரு வோங் யோசனை கூறினார்.
அரசாங்கமும் பங்களித்து அதற்கான வாய்ப்புகளைப் பெருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"சிங்கப்பூர் கதையின் அடுத்த அத்தியாயத்தை எழுதுவதில் உங்கள் அனைவருக்கும் முக்கிய பங்கு உள்ளது," என்று துணைப் பிரதமர் கூறினார். இளைய தலைவர் ளுக்கான வல்லுநர் திட்டத்தின் விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசினார். இளைய தலைவர்களையும் தொழில் முனைவர்களையும் உருவாக்க உதவும் ஹெலோஜன் அறநிறுவனம் எனும் அமைப்பு அந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
திரு வோங் துணைப் பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் அவர் ஆற்றிய முதல் உரை இதுவாகும்.பிரதமர் லீ விடுப்பில் இருப்பதால் அவர் தற்போது தற்காலிகப் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார்.