பொது தனித்தன்மை மிளிர கலைகள் கைகொடுக்கும்

பொது தனித்தன்மை மிளிர கலைகள் கைகொடுக்கும்

2 mins read
53cf5509-b443-4bf1-a179-4826787a9ad2
-

அமைச்சர் டோங்: அனைவருக்குமான வலுவான சிங்கப்பூரை பலப்படுத்துவது முக்கியம்

பிரிந்து கிடக்­கின்ற, எளி­தில் ஊறு­ப­டத்தக்க நிலை­யில் உள்ள உலகில் பொது­வான பலத்­தை­யும் அடை­யாளத்­தை­யும் உரு­வாக்கி எப்­படி நிலை­நாட்­டு­வது என்­பதே சிங்­கப்­பூர் எதிர்­நோக்­கும் மிக முக்­கிய கேள்வி என்று கலா­சார, சமூக, இளை­யர்துறை அமைச்­சர் எட்­வின் டோங் தெரி­வித்துள்ளார்.

இனம், சம­யம் இரண்டும் எளி­தில் பிரச்­சினை­களாக உரு­வா­கக்­கூடிய அம்­சங்­க­ளாக உள்ளன.

மக்­க­ளி­டையே கருத்து வேறு­பாட்டை அதி­கப்­ப­டுத்தி அவர்­களைப் பிள­வு­ப­டுத்த விரும்­பு­வோர் செய்­யும் காரி­யங்­க­ளுக்­கு அவை தோதா­ன­வை­யாக உள்­ளன.

அதி­க­ரிக்­கும் சமூக ஊட­கப் பயன்­பாடு போன்ற போக்­கு­களும் அத்­த­கைய பிள­வு­களை ஊக்­கு­விக்­கும் சக்­தி­யாக இருந்து­ள்­ளன.

இந்­தச் சூழ்­நி­லை­யில் நாம் வெற்றி பெற்று நம்­ நாட்டை முன்­னேற்­றிச் செல்­வ­தற்­கான வழி, பொது­வான மனப்­போக்கை, பொது­வான எண்­ணத்தை, எல்­லா­ரை­யும் உள்­ள­டக்­கூ­டிய வலு­வான சிங்­கப்­பூரை உரு­வாக்­கு­வ­து­தான். இதைப் பொறுத்தவரை வெறும் பேச்­சோடு நின்­று­வி­டா­மல் சிங்­கப்­பூ­ரில் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் இடம் உண்டு என்­பதை உறு­திப்­ப­டுத்த வேண்­டும் என்று திரு டோங் தெரி­வித்­தார்.

இத்­த­கைய ஒரு பின்­ன­ணி­யில் கலை­கள் பொது­வான, வலு­வான ஒரு சக்­தி­யா­கத் திகழ்ந்து சிங்­கப்­பூ­ரின் ஒட்­டு­மொத்த தனித்­தன்­மை­யைப் பலப்­ப­டுத்த முடி­யும் என்று அமைச்­சர் கூறினார்.

கலை­கள், கலைப்­பொ­ருள்­கள், மதிப்­பு­மிக்க வர­லாற்று அம்­சங்­கள் ஆகியவற்றின் வழி­யா­க­வும் அவற் றில் நமக்­குள்ள அனு­ப­வங்­களைப் பகிர்ந்­து­கொள்­வ­தன் மூலமும் ஒருவர் மற்­றொ­ரு­வ­ரை சிறந்த முறையில் புரிந்துகொள்ள முடி­யும் என்று திரு டோங் குறிப்­பிட்­டார்.

மலாய் மர­பு­டைமை அற­நி­று­வனம் என்ற அமைப்பு ஒரு புதிய தளத்­தைத் தொடங்கி இருக்­கிறது.

அந்­தத் தொடக்க நிகழ்ச்சி தி ஆர்ட்ஸ் ஹவுஸ் கட்­ட­டத்­தில் நடந்­தது. அதில் அமைச்­சர் பேசி­னார்.

'செம்­பாங் இலுமு பிளஸ்' என்ற புதிய இணை­யத்­த­ளம் போன்ற தளங்­கள் பொது­வான புரிந் துணர்வை உரு­வாக்­கு­வ­தோடு யோச­னை­களை ஆக்­க­க­ர­மான செயல்­களா­க­வும் மாற்­று­கின்­றன என்­பதை அமைச்­சர் சுட்­டி­னார்.

அர­சாங்­கம், குடி­மைச் சமூ­கம் இதர அமைப்­பு­கள் அல்­லது அடித்­தள நட­வ­டிக்­கை­களில் இளை­யர்­களை ஈடு­ப­டுத்தி அவர்­க­ளைச் சேர்ந்து செயல்­பட வைத்து அதன்­மூ­லம் இதனை இத்­த­கைய தளங்­கள் செய்­கின்­றன என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

நேற்று நடந்த ஆய்­வ­ரங்கு பாணி­யி­லான நிகழ்ச்­சி­யில் கலை உலக சமூ­கத்­தைச் சேர்ந்த பல­ரும் உரை­யாற்­றி­னார்­கள்.

'தியேட்­டர் ஈகா­மத்ரா' என்ற நாடக கம்­பெ­னி­யின் நிர்­வாக இயக்­கு­ந­ரான ஷாஸா இஷாக், கவி­ஞரும் புகைப்­பட கலை­ஞ­ரு­மான மார்க் நாயர், கலைப் போத­கர் அமின் ஃபாரித், சுயேட்சை கல்விமான் வோங் சீ மெங் ஆகி­யோர் உரை­யாற்­றி­ய­வர்­களில் அடங்­கு­வர்.

சிங்­கப்­பூ­ரில் கலை­க­ளின் நோக்­கம் பற்­றி­யும் அவற்­றின் மதிப்பு பற்­றி­யும் டாக்­டர் நாயர் உரை­யாற்றி­னார்.