நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் பொறியியல் பள்ளி மாணவர்கள், 'ஒன்அரேனா இயந்திர மனிதன் சவால்போட்டி'க்கு ஏற்பாடு செய்தார்கள்.
இயந்திர மனிதன் தொழில்நுட்பத்தின் மூலம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (ஸ்டெம்) ஆகிய துறைகளில் மாணவர்களுக்கு விருப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட போட்டி கடந்த வெள்ளிக்கிழமை முடிந்தது.
அதில் தொடக்கக் கல்லூரி மாணவர்கள் 121 பேர் 26 குழுக்களாகக் கலந்துகொண்டார்கள்.
ஆங்கிலோ சீனப் பள்ளியை (சுயேச்சை) சேர்ந்த தி பிளாங்க். பி என்ற குழு வென்றது. அதற்கு $1,600 வழங்கப்பட்டது.
போக்குவரத்து அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங் போட்டி நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நடைமுறை உலகில் இயந்திர மனிதத் தொழில்நுட்பம் ஆற்றும் முக்கிய பங்கை அவர் விளக்கினார்.