உட்லண்ட்சுக்கும் மலேசியாவின் ஜோகூர் பாரு நகருக்கும் இடையிலான ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமையன்று (19 ஜூன்) மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது.
மலேசியாவின் போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் அதைத் தெரிவித்தார்.
'கேடிஎம்' எனும் இந்த ரயில் சேவையில் ஐந்தே நிமிடங்களில் உட்லண்ட்சிலிருந்து ஜோகூர் பாரவுக்குச் செல்லமுடியும்.
இவ்விரு பகுதிகளுக்கும் இடையே தினமும் 31 ரயில் சேவைகள் இயங்கும் என்று திரு வீ கூறினார்.
கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டு மாரச் மாதம 24ஆம் தேதியிலிருந்து இந்தச் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.