ஜிஎஸ்டி உயர்வால் அதிகரிக்கும் செலவு குறித்த கருத்துகள்

ஜிஎஸ்டி உயர்வால் அதிகரிக்கும் செலவு குறித்த கருத்துகள்

2 mins read
138c8fd5-bb33-4715-b67f-a01f9acdb4e4
-

செங்காங் கலந்துரையாடல் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட யோசனை

செங்­காங்­கில் நேற்று நடை­பெற்ற பொது­மக்­கள் கலந்­து­ரை­யா­டல் நிகழ்ச்­சி­யில், பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) உயர்த்­தப்­ப­டு­வ­தன் தொடர்­பில் அதி­க­ரித்­துள்ள வாழ்க்­கைச் செல­வி­னம் பற்­றிய கவ­லையே மிகுந்து இருந்­தது.

காம்பஸ்­வே­லில் உள்ள பன்­னோக்கு அரங்­கில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லில் கிட்­டத்தட்ட 30 குடி­யி­ருப்­பா­ளர்­கள் கலந்துகொண் ­ட­னர்.

செங்­காங் குழுத்­தொ­குதி நாடாளு­மன்ற உறுப்­பி­னர்­கள் ஜேமஸ் லிம், ஹி டிங் ரு, லுவிஸ் சுவா ஆகி­யோ­ரு­டன் அவர்­கள் தங்­க­ளது கருத்­து­க­ளைப் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

பள்­ளிக்­கூ­டங்­களில் மன­ந­லம், சம­மற்ற செல்­வ­நிலை ஆகி­யன அவர்­கள் பகிர்ந்­து­கொண்ட இதர அம்­சங்­கள்.

அவர்­க­ளுக்­குப் பதி­ல­ளித்த துணைப் பேரா­சி­ரி­யர் ஜேமஸ் லிம், ஜிஎஸ்டி உயர்­வுக்கு எதி­ராக நாடாளுமன்­றத்­தில் பாட்­டா­ளிக் கட்சி வாதா­டும் என்­றார்.

அத்­து­டன், செல்வ வரி, கரிம வரி ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கிய வரி விதிப்பு முறைக்கு மாற்று வேண்­டும் என­வும் தமது கட்சி கோரிக்கை விடுக்­கும் என்­றார் அவர்.

தற்­போது 7 விழுக்­கா­டாக உள்ள ஜிஎஸ்டி அடுத்த ஆண்டு ஜன­வரி 1 முதல் 8 விழுக்­கா­டாக உய­ர்கிறது. தொடர்ந்து, 2024 ஜன­வரி 1 முதல் அதனை 9 விழுக்­கா­டாக உயர்த்த உத்­தே­சிக்­கப்­பட்டு உள்­ளது.

உக்­ரேன்­மீது ரஷ்யா படை­யெ­டுத்­தி­ருப்­ப­தைத் தொடர்ந்து அண்­மைய மாதங்­க­ளாக சிங்­கப்­பூ­ரி­லும் உல­க­ள­வி­லும் பண­வீக்­கம் அதி­க­ரித்து உள்­ளது.

சிங்­கப்­பூ­ரின் இவ்­வாண்­டுக்­கான ஒட்­டு­மொத்த பண­வீக்­கம் 5 விழுக்­காட்டை எட்­டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக இம்­மா­தத் தொடக்­கத்­தில் பகுப்­பாய்­வா­ளர்­கள் முன்­னு­ரைத்து இருந்­த­னர்.

இது, இதற்கு முன்­னர் சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் வெளி­யிட்ட ஆய்­வில் குறிப்­பி­டப்­பட்ட 3.6 விழுக்­காடு என்­ப­தை­விட அதி­கம்.

செங்­காங்­கில் நேற்று நடத்­தப்­பட்ட நிகழ்வு, 'செங்­காங் கலந்­து­ரை­யா­டல்' என்ற பெய­ரில் செங்­காங் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் நடத்தி வரும் கருத்­த­ரங்­கின் தொடர்ச்சி.

நாட்­டி­லும் தொகு­தி­யி­லும் உள்ள பிரச்­சி­னை­கள் குறித்து தங்­க­ளது கருத்­தைப் பொது­மக்­கள் தெரி­விக்­க­வும் கேள்­வி­களை எழுப்­ப­வும் இந்­தக் கருத்­த­ரங்­குத் தொடர் நடத்­தப்­ப­டு­வ­தாக பாட்­டா­ளிக் கட்சி தெரி­வித்து உள்­ளது.

முதல் மக்­கள்­கூட்­டம் ஜன­வரி மாதம் ஸூம் வழி­யாக நடத்­தப்­பட்­ட­தா­க­வும் ஒவ்­வொரு காலாண்­டி­லும் இத­னைத் தொடர்ந்து நடத்த தமது குழு எண்­ணி­யுள்­ள­தா­க­வும் திரு­வாட்டி ஹி தெரி­வித்­தார்.

செல­வின உயர்வு குறித்து நேற்று கருத்­துத் தெரி­வித்த குடி­யி­ருப்­பா­ளர் ஒரு­வர், ஜிஎஸ்டி உயர்வை வெவ்­வேறு வகை­யான பொருள்­க­ளின் அடிப்­ப­டை­யில் மேற்­கொள்­ள­லாமா என நாடா­ளு­மன்­றத்­தில் கேள்வி எழுப்ப இய­லுமா என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­

க­ளி­டம் கேட்­டார்.

உதாரணத்திற்கு, ஆடம்­ப­ரப் பொருள்­களை வாங்கு­வோ­ருக்கு ஜிஎஸ்டி உயர்வு ஒரு பொருட்­டாக இருக்­காது என்­றும் அவர் கூறி­னார்.

செங்­காங் நகர மன்­றத் தலை­வ­ரு­மான திரு­வாட்டி ஹி கூறு­கை­யில், குடி­யி­ருப்­பா­ள­ரின் கருத்து தமது கருத்­தோடு ஒத்து இருப்­ப­தா­கக் கூறி­னார்.

அதா­வது, உணவு, சுகா­தா­ரப் பரா­மரிப்பு போன்­றவற்றுக்கு ஜிஎஸ்டி உயர்­வி­லி­ருந்து விலக்கு அளிக்­க வேண்­டும் என்­பது தமது கருத்து என்­றும் சக நாடாளுமன்ற உறுப்­பி­னர்­களும் இதனைக் கவ­னத்­தில் கொள்­வார்­கள் என்­றும் அவர் தெரி­வித்­தார்.