குற்றவாளிகளைப் பிடிக்க அண்மைக் காலமாக மரபணுச் சோதனை முறை காவல்துறைக்குப் பெரிதும் உதவிவருகிறது.
குறிப்பாக, கொலைக் குற்ற
வாளிகளைப் பிடிப்பதில் கடந்த எட்டு, ஒன்பது ஆண்டுகளாக மர
பணுச் சோதனை முடிவுகளின் பயனாக 100 விழுக்காடு வெற்றி கிடைத்து உள்ளதாக காவல்
துறையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவுத் தலைவர், கண்காணிப் பாளர் ராய் லிம் தெரிவித்துள்ளார்.
குற்றம் நிகழ்ந்ததைப் பார்த்த சாட்சிகள் இல்லாதபோதும் சம்பவப் பகுதியில் கண்காணிப்புப் படச் சாதனங்கள் (சிசிடிவி) இல்லாத நிலையிலும் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் மரபணுச் சோதனைத் தரவுகள் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் கூறினார்.
குற்றச் செயல்களைக் கண்டறிய 1991ஆம் ஆண்டு முதல் மர
பணுச் சோதனை முறையை காவல்துறை பயன்படுத்தி வருகிறது.
இதற்கான தரவுப் பதிவு முறை 2004ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. குற்றவாளிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்தம், எச்சில் மாதிரிகளின் அடிப்படையில் அவர்
களைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்து வைக்க இது உதவு கிறது.
இவ்வாறு பதிவுசெய்யப்பட்ட குற்றவாளிகளில் பலர் தண்டிக்கப்பட்டுள்ளனர். போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழான குற்றங்களைப் புரிந்தோரும் இவர்களில் அடங்குவர்.
தண்டனை பெற்ற குற்றவாளி விடுதலை ஆகிவிட்டாலோ இறந்து விட்டாலோ அவர் தொடர்பான மரபணு விவரங்கள் தரவுப் பதிகளில் இருந்து அழிக்கப்படவேண்டும் என குற்றவாளிகள் பதிவுச் சட்டம் வரையறுக்கிறது.
ஏப்ரல் மாதம், பாலியல் தாக்குதல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் பல்வேறு குற்றங்
களுக்குத் தீர்வுகாண மரபணுச் சோதனை விவரப் பதிவுகள் உதவி உள்ளதாகத் தெரிவித்தார்
அதற்கு அவர் ஓர் உதாரணத்தையும் குறிப்பிட்டார். 2002ஆம் ஆண்டுமுதல் தீர்வு காணப்படாமல் கிடப்பில் இருந்த பாலியல் வன்புணர்வு வழக்கு ஒன்றில் பல ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளியைக் கைதுசெய்ய மரபணுச் சோதனை மாதிரி கைகொடுத்ததாக திரு சண்முகம் கூறினார்.

