பதாகைகளில் பேருந்து நிறுத்தம், கழிவறை போன்ற இடங்களைக் குறிக்கும் வாசகங்களைப் படித்துத் தெரிந்துகொள்ள பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு உதவும் வகையில் செயலி ஒன்றை
மாணவர்கள் உருவாக்கி உள்ளனர்.
'தி சிக்ஸ்த் சென்ஸ்' எனப்
பெயரிடப்பட்டுள்ள அந்தச்
செயலியை சிங்கப்பூர் பார்வைத்திறன் குறைபாடுள்ளோருக்கான சங்கத்தின் உதவியோடு தொழில்நுட்பக் கல்விக் கழகத்தைச் சேர்ந்த ஒன்பது மாணவர்கள் உருவாக்
கினர்.
அச்செயலியை உருவாக்கும் பணியில் இந்த மாணவர்கள் கடந்த ஆண்டிலிருந்து ஈடுபட்டு வந்தனர்.
"செயலியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து கேமராவை இயக்கி பதாகையை நோக்கி குறிவைக்கலாம். அவ்வாறு செய்யும்போது பதாகையில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகத்தை செயலி வாசித்துக் காட்டும்," என்று செயலியை உருவாக்கிய மாணவர்களில் ஒருவரும் அக்குழுவின் பிரதிநிதியுமான 18 வயது ஜேஸ்லின் இயோ கூறினார்.
பதாகைகளில் உள்ள சொற்கள், வாசகங்களைப் படிக்க முடியவில்லை என்று பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்கள் வருத்தத்துடன் தெரிவித்ததைக் கேட்டு அவர்களுக்கு உதவும் வகையில் செயலி ஒன்றை உருவாக்க வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டதாக ஜேஸ்லினின் குழு கூறியது.
"பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்கள் சுயமாகச் செயல்பட விரும்புகின்றனர்.
பதாகைகளில் உள்ள சொற்
களைத் தங்களுக்கு வாசித்துக் காட்டும்படி மற்றவர்களுக்கு அவர்கள் தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை.
இதை மனதில் வைத்துக்கொண்டு இந்தச் செயலியை நாங்கள் உருவாக்கியுள்ளோம்," என்றார் ஜேஸ்லின். தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் தொழில்சார்ந்த பயிற்சி மன்றத்தின் அனைத்துலக மாணவர் கருத்தரங்கில் அறிமுகப்படுத்தப்பட்ட 16 திட்டங்களில் 'தி சிக்ஸ்த் சென்ஸ்' செயலியும் ஒன்று.