ஹஜ் யாத்திரையில் பங்கேற்க சிங்கப்பூர் முஸ்லிம்களுக்கு இவ்வாண்டு கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆனால் சிங்கப்பூர் யாத்திரிகர்
களுக்கு எவ்வளவு இடம் அளிக்கப்படுகிறது என்ற தகவலை சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) வெளியிடவில்லை.
ஹஜ் யாத்திரையில் பங்கேற்க முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு இந்தக் கூடுதல் இடங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. கூடுதல் இடங்கள் தொடர்பாக சவூதி அரேபியா அதிகாரி களிடம் இணைந்து செயல்படுவதாகவும் நிர்ணயிக்கப்படும் எண்ணிக்கை கூடிய விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் முயிஸ் கூறியது.
இதற்கு முன்பு சிங்கப்பூரிலிருந்து 407 பேர் ஹஜ் யாத்திரையில் பங்கேற்பர் என்று தெரிவிக்கப்பட்டது.

