அறிவுத்திறன் குன்றியோருக்கு வேலைவாய்ப்பு

அறிவுத்திறன் குன்றியோருக்கு வேலைவாய்ப்பு

2 mins read
2b11dc69-070a-497f-a1c7-69cf7394952e
அறிவுத்திறன் குன்றிய சரவணன் குமாரசாமிக்கு வேலை கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார் அவரது பராமரிப்பாளரான செல்வராணி குமாரசாமி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அறி­வுத்­தி­றன் குன்­றி­யோ­ருக்கு வேலை­வாய்ப்பு வழங்­கும் புதிய திட்­டத்­தின்­கீழ் பத்­துப் பேர் நேற்று வேலை­வாய்ப்பு பெற்­றுள்­ள­னர். துப்­பு­ர­வா­ளர், தோட்­டப் பரா­ம­ரிப்­பா­ளர் போன்ற வேலை­களில் இவர்­கள் ஈடு­ப­டு­கின்­ற­னர்.

வட­கி­ழக்­குச் சமூக மேம்­பாட்டு மன்­ற­மும் 'மைண்ட்ஸ்' எனப்­படும் அறி­வுத்­தி­றன் குன்­றி­யோ­ருக்­கான சிங்­கப்­பூர் இயக்­க­மும் இணைந்து சமு­தாய வேலை­வாய்ப்­புத் திட்­டம் எனும் இந்­தத் திட்­டத்­தைத் தொடங்­கி­யுள்­ளன.

அறி­வுத்­தி­றன் குன்­றி­யோ­ரும் வேலை­வாய்ப்பு பெற­வும் சமூ­கத்­திற்­குப் பங்­க­ளிக்­க­வும் உத­வும் முயற்­சி­க­ளின் ஓர் அங்­கம் இந்­தப் புதிய திட்­டம் என்று சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி கூறி­னார்.

சமு­தாய வேலை­வாய்ப்­புத் திட்­டத்­தில் கூடு­த­லான சமூ­க­சேவை அமைப்­பு­க­ளை­யும் நிறு­வ­னங்­க­ளை­யும் பங்­கா­ளி­க­ளாக இணைக்க முயற்­சி எடுக்கப்படுகிறது.

­முதலில் வேலை­வாய்ப்பு பெற்ற பத்து பேரும் இம்­மா­தம் 1ஆம் தேதி­யில் இருந்து தெம்­ப­னிஸ் சங்­காட் சமூ­கத் தோட்­டத்­தி­லும் தெம்­ப­னிஸ் வெஸ்ட் சமூக மன்­றத்­தி­லும் பணி­பு­ரி­கின்­ற­னர். 'மைண்ட்ஸ்' அமைப்பு அவர்­க­ளைத் தனிப் பேருந்­தில் வேலை­யி­டத்­துக்­குக் கூட்­டிச்­சென்று திரும்ப அழைத்­து ­வ­ரு­கிறது.

வேலை­வாய்ப்பு பெற்ற பத்து பேரில் ஒரு­வர் 30 வய­தா­கும் சர­வ­ணன் குமா­ர­சாமி. இவர் தெம்­ப­னிஸ் வெஸ்ட் சமூக மன்­றத்­தில் துப்­பு­ர­வா­ள­ரா­கச் சேர்ந்­துள்­ளார்.

சகோ­த­ரி­யும் இவ­ரது பரா­ம­ரிப்­பா­ள­ரு­மான செல்­வ­ராணி குமா­ர­சாமி, தனது சகோ­த­ர­ருக்கு இத்­த­கைய வேலை­வாய்ப்பு கிடைத்­தது குறித்து மகிழ்ச்சி தெரி­வித்­தார்.

"அவர் இந்த வேலையை மிக­வும் விரும்­பிச் செய்­கி­றார்; ஒவ்­வொரு நாளும் தனது வேலை­யைப் பற்றி என்­னி­டம் பகிர்ந்­து­கொள்­கிறார்," என்­றார் அவர். சர­வ­ண­னின் சம்­ப­ள­மும் வேலை தொடர்­பான இதர வரு­வா­யும் அவ­ரது பாது­காப்­புக்கு மட்­டு­மின்றி குடும்­பச் செலவு­களுக்­கும் கைகொ­டுக்­கும் என்­றார் செல்­வ­ராணி.

சர­வ­ணன் உள்­ளிட்ட பத்து பேரும் ஏற்­கெ­னவே 'மைண்ட்ஸ்' அமைப்­பில் இதே­போன்ற வேலைக்­குப் பயிற்சி பெற்­ற­வர்­கள். அதன் வேலை­வாய்ப்பு மேம்­பாட்டு நிலை­யத்­தில் இவர்­கள் நல்­ல­மு­றை­யில் பணி­யாற்­றி­ய­தால் இந்த முன்­னோ­டித் திட்­டத்­திற்­குத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டது.

இவர்­கள் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் வேலை­செய்­வர். மாதம் 500 வெள்ளி முதல் 600 வெள்ளி வரை இவர்­க­ளுக்­குச் சம்­ப­ளம் வழங்­கப்­படும்.

துப்­பு­ர­வா­ளர், தோட்­டப் பரா­ம­ரிப்­பா­ளர் பணி­கள் ஏன் இத்­த­கை­யோ­ருக்­குத் தெரி­வு­செய்­யப்­பட்­டன என்ற கேள்­விக்கு வட­கி­ழக்கு வட்­டார மேயர் டெஸ்­மண்ட் சூ பதி­ல­ளித்­தார். தோட்ட வேலை தொடு உணர்­வு­டன் தொடர்­பு­டை­யது என்­ப­தைக் குறிப்­பிட்ட அவர், அறி­வுத்­தி­றன் குன்­றி­யோ­ருக்கு இது ஒரு சிகிச்­சை­யைப் போன்­றது என்று விளக்­கி­னார்.

திட்­டம் பங்­கேற்­போரின் தன்­னம்­பிக்­கை­யையும் வேலைத்­தி­ற­னை­யும் வளர்க்க உத­வும் என்றார் அமைச்­சர் மச­கோஸ்.